தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓசூரில் ஆகப்பெரிய ஐஃபோன் தொழிற்சாலை

2 mins read
5d3a37eb-bee4-48df-b1d2-b9f3340ff3a2
-

சென்னை: இந்­தி­யா­வி­லேயே ஆகப்­பெ­ரிய ஐஃபோன் தயா­ரிப்பு தொழிற்­சாலை ஓசூ­ரில் தொடங்­கப்­படும் என்று அறி­விப்பு வெளி­யா­கி­யி­ருப்­ப­தாக உள்­ளூர் ஊட­கம் ஒன்று தக­வல் வெளி­யிட்­டுள்­ளது.

இந்­தத் தொழிற்­சா­லை­யில் ஒரே நேரத்­தில் 60,000 பேர் பணி­யாற்­று­வார்­கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இதற்­கான கட்­டு­மா­னப் பணி­களை டாடா குழு­மம் மேற் கொண்டு வரு­கிறது.

சீனா­வில் அமைந்­துள்ள உல­கின் மிகப்­பெ­ரிய ஐஃபோன் தொழிற்­சாலை பல்­வேறு கார­ணங்­ க­ளால் மூடப்­படும் சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ளது. இத­னால் மாற்று ஏற்­பாட்டை செய்­வ­தில் ஆப்­பிள் நிறு­வ­னம் தீவி­ரம் காட்டி வந்­தது. இந்­தச் சூழ­லில்­தான் இந்­தி­யா­வில் புதிய ஆலையை தொடங்க முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக ஃபாக்ஸ்­கான் நிறு­வ­னம் அடுத்த இரண்டு ஆண்­டு­களில் மேலும் 53,000 பேரை பணி­யில் அமர்த்த முடிவு செய்­தி­ருக்­கிறது. இது தொடர்­பாக தனி­யார் தொலைக்­காட்சி ஒன்­றுக்கு பேட்­டி­ய­ளித்த தொழிற்­துறை அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு, தமிழ்­நாட்­டில் மிக வேக­மாக வளர்ந்து வரும் தொழில் நக­ரம் ஓசூர் என்று குறிப்­பிட்டு உள்­ளார்.

"ஏற்கெ­னவே ஐஃபோன் உதிரிப் பாகங்­களை தயா­ரிக்­கும் ஃபாக்ஸ்­கான், ஃபெகட்­ரான் ஆகிய நிறு­வ­னங்­கள் தமி­ழ­கத்­தில் செயல்­பட்டு வரு­கின்­றன. இந்த நிலை­யில் ஐஃபோன் தயா­ரிப்புப் பணி­களை விரி­வாக்­கம் செய்­யும் வகை­யில் பிரம்­மாண்ட தொழிற்­சா­லையை அமைக்க டாடா நிறு­வ­னம் முன்­வந்­துள்­ளது.

"முதல் கட்­ட­மாக 5,500 பேர் பணி­யில் அமர்த்­தப்­பட்­டுள்­ள­னர். இதில் 50 விழுக்­காட்­டிற்­கும் மேலா­னோர் தமி­ழ­கத்தைச் சேர்ந்­த­வர்­கள். கடந்த மூன்று முதல் நான்கு மாதங்­களில் மட்­டும் அதிக அள­வில் வேலை வாய்ப்பு உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. தமி­ழ­கத்­தில் மிக­வும் பாது­காப்­பான தொழில் சூழல் காணப்­ப­டு­கிறது.

"புதிய தொழில் நிறு­வ­னங்­கள் தொடங்­கு­வது என்­றா­லும், தங்­கள் தொழிலை விரி­வாக்­கம் செய்­வது என்­றா­லும் தமி­ழ­கத்­தில் நல்­ல­தொரு சூழல் நில­வு­கிறது. அவர்­க­ளுக்குத் தேவை­யான அனைத்து உதவிகளை­யும் தமிழக அர­சின் தொழில்­துறை செய்து தரு­கிறது," என்­றார் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு.