தவறான சிகிச்சையால் உயிரிழந்த காற்பந்து வீராங்கனைக்கு மாணவிகள் அஞ்சலி

தவறான சிகிச்சையால் உயிரிழந்த காற்பந்து வீராங்கனைக்கு மாணவிகள் அஞ்சலி

2 mins read
4b4d414e-5dd3-4ed3-835e-dbc263cfa20e
-

சென்னை: காற்­பந்து வீராங்­க­னை­யான பிரியா, 17, தவ­றான சிகிச்­சை­யால் மர­ண­ம­டைந்­த­தா­கக் கூறப்­படும் வேளை­யில் அவ­ருக்கு ராணி மேரி கல்­லூரி மாண­வி­கள் மௌன அஞ்­சலி செலுத்­தி­யுள்­ள­னர். சென்னை வியா­சர்­பா­டியை சேர்ந்த கல்­லூரி மாணவி பிரியா, ராணி மேரி கல்­லூ­ரி­யில் உடற்­ கல்­வி­யி­யல் பாடத்தை எடுத்து படித்து வந்­தார்.

காற்­பந்து வீராங்­க­னை­யா­கும் லட்­சி­யத்­து­டன் தின­மும் பயிற்­சி­யில் ஈடு­பட்டு வந்த அவர், கடந்த மாதம் 20ஆம் தேதி வலது காலில் சுளுக்கு ஏற்­பட்டு வலி­யால் அவதிப்­ பட்­டதாகக் கூறப்படுகிறது.

இதை­ய­டுத்து பெரி­யார் நகர் மருத்­து­வ­ம­னை­யில், பிரியாவுக்கு கால்­முட்டி சவ்வு சீர­மைப்பு அறுவை சிகிச்சை செய்­யப்­பட்­டது. பின்­னர், காலில் வீக்­கம் ஏற்­பட்டு உணர்­வி­ழப்பு ஏற்­பட்­ட­தால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்­து­வ­ம­னைக்கு மேல் சிகிச்­சைக்­காக அவர் சேர்க்­கப்­பட்­டார். அங்கு மேற்­கொள்­ளப்­பட்ட மருத்­து­வப் பரி­சோ­த­னை­யில் அவ­ரது வலது காலில் ரத்த ஓட்­டம் தடை­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது.

காலில் தசை­கள் அனைத்­தும் அழு­கக்­கூ­டிய நிலை­யில் இருப்­ப­தால் காலை அகற்ற வேண்­டும் என்று மருத்­து­வர்­கள் அறி­வு­றுத்­தி­னர். அதைத் தொடர்ந்து பிரி­யா­விற்கு அறுவை சிகிச்சை மூலம் வலது கால் அகற்­றப்­பட்­டது. இந்த நிலை­யில் அவ­ருக்­குத் தீவிர சிகிச்சை அளித்­தும் பல­னின்றி உயி­ரி­ழந்­தார்.

இந்த நிலை­யில், மாணவி படித்த ராணி மேரி கல்­லூ­ரி­யில் மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள் நேற்று காலை மெளன அஞ்­சலி செலுத்­தி­னர்.

மாணவி பிரி­யா­வுக்கு ஏற்­பட்ட 'Ligament Tear' என்­பது காற்­பந்து விளை­யா­டும் 100 நபர்­களில் 50க்கும் அதி­க­மா­னோ­ருக்கு ஏற்­ப­டக்­கூ­டி­யது. இதற்­கி­டையே, காற்­பந்து வீராங்­கனை உயி­ரி­ழப்பு கவ­னக் குறை­வால் நிகழ்ந்­துள்­ளது என்­பதை அரசு ஒப்­புக் கொள்­வ­தாக சுகா­தார அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

முதல்கட்ட மருத்­து­வர் அறிக்­கையை வைத்து இரு மருத்­து­வர்­கள் பணி­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ள­னர். இதன் தொடர்­பில் வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. காவல்­துறை விசா­ரணை நடத்­தும் என்று அவர் கூறி­யுள்­ளார்.