தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒருபுறம் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது; மறுபுறம் 15 மீனவர்கள் விடுவிப்பு இலங்கை கடற்படை தாக்கி பார்வை இழந்த மீனவர்

2 mins read
256b1bb0-7658-4452-919b-ae6772e9c2c7
பிழைப்­பிற்­காக உயிரைப் பண­யம் வைத்து கட­லில் மீன்பிடிக்­கும் எங்­களைப் பார்வை பறி­போ­கும் அள­வுக்கு இப்படித் தாக்குவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று செய்தி யாளர்களிடம் பேசிய ஜான்சன் தெரிவித்தார். அவரருகில் அவரது மனைவி.படம்: ஊடகம் -

ராமேஸ்­வ­ரம்: இலங்கை கடற்­படை யின­ரால் தாக்­கப்­பட்ட ராமேஸ்­வ­ரம் மீன­வர் பார்­வையை இழந்­துள்ள நிலையில், காரைக்­கால் மீன­வர்­கள் 14 பேர் சிறை­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

ராமேஸ்­வ­ரம் மீன்­பி­டித் துறை முகத்­தில் இருந்து கடந்த திங்­கள் அன்று 500 விசைப்­ப­ட­கு­களில் 2,500 மீனவர்­கள் கட­லுக்­கு மீன் பிடிக்கச் சென்­ற­னர்.

கச்­சத் தீவு அருகே சுற்­றுக்­காவல் பணி­யில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்த இலங்கை கடற்­படை­யி­னர் தமி­ழக மீன­வர்­களை மீன்­பி­டிக்க விடா­மல் விரட்டி அடித்­த­னர்.

அப்­போது, அந்­தோணி அடிமை என்­ப­வ­ரது படகு மீது இலங்கை கடற்­ப­டை­யி­னர் தங்­க­ளது படகால் மோதினர்.

அத்துடன், தமிழக மீனவர்களின் படகுக்குள் ஏறிய ஐந்து கடற்படை வீரர்கள், எட்டு மீன­வர்­க­ளைக் கடு­மை­யா­கத் தாக்கி உள்­ள­னர்.

இதில் கண்­ணில் பலத்த காயம் அடைந்த மீன­வர் ஜான்­சன், 48, மதுரை தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் நவம்பர் 15ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு தங்­கச்சிமடத் தில் உள்ள தனது இல்லத்துக்குத் திரும்பினார்.

14 மீனவர்கள் கைது

இத­னி­டையே, எல்லை தாண்டி மீன் பிடித்­த­தாக புதுச்சேரி, காரைக் கால் கடற்கரையில் இருந்து சென்ற 14 மீன­வர்­களை இலங்கை கடற்­படையினர் நேற்று முன்தினம் அவர்களது படகுடன் சிறை பிடித்த னர். காரை­ந­கர் கடற்­படை முகா­மிற்குக் கொண்டுசென்று விசா­ரணை நடத்தி வரு­வ­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

இலங்கை கடற்­ப­டை­யின் இந்­தச் செய­லுக்கு கண்­ட­னம் தெரி­வித்­துள்ள தமி­ழ­கம், புதுச்­சேரி மீன­வர்­கள், சிறைபிடிக்­கப்­பட்­டுள்ள மீனவர்­களை விடு­விக்க மத்­திய-மாநில அர­சு­கள் உடனடி நடவ­டிக் கைகளை எடுக்­க­வேண்­டும் என்று வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

15 மீனவர்கள் விடுதலை

இந்நிலையில், கச்சத்தீவு அருகே கடந்த 5ஆம் தேதி கைதான ஒரு சிறுவன் உள்பட 15 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை மன்னார் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்ய உத்தரவிட்டு உள்ளது. அவர்கள் இன்னும் ஒரு சில நாள்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்ணில் உள்ள நரம்புகள் சிதைந்து, 90% பார்வை பறிபோய் விட்டது என்றும் இனி பார்வை திரும்ப வாய்ப்பில்லை என்றும் மருத்துவர்கள் கூறினர். வயிற்றுப் பிழைப்புக்காகச் செல்பவர்களை இப்படித் தாக்குவது முறையல்ல.

மீனவர் ஜான்சன்