தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரியாவின் மரணத்துக்கு கவனக்குறைவே காரணம்; மருத்துவர்கள் கைதாக வாய்ப்பு

2 mins read
76ff31fc-0090-45bf-9662-0abdb152a16c
-

சென்னை: கல்­லூரி மாண­வி­யும் காற்­பந்து வீராங்­க­னை­யு­மான பிரி­யா­வின் (படம்) மர­ணத்­திற்கு மருத்­து­வர்­க­ளின் அலட்­சி­யமே கார­ணம் என்­பது உறு­தி­யாகி உள்­ள­தால், அதற்குக் காரணமான இரு மருத்­து­வர்­களும் எந்­நே­ரத்­தி­லும் கைது செய்­யப்­பட வாய்ப்­புள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து, தலை­ம­றை­வாகி உள்ள இரு மருத்­து­வர்­களும் முன்­பிணை கேட்டு சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் மனுத் தாக்­கல் செய்­துள்­ள­னர்.

சென்னை, வியா­சர்­பா­டி­யைச் சேர்ந்த காற்­பந்து வீராங்­கனை பிரியா, கொளத்­தூர் பெரி­யார் நகர் அரசு மருத்­து­வ­ம­னை­யில் அளிக்­கப்­பட்ட தவ­றான சிகிச்சையால் கடந்த இரு தினங்­க­ளுக்கு முன் உயி­ரி­ழந்­தார்.

இதைத்­தொ­டர்ந்து, பிரி­யா­வுக்கு சிகிச்சை அளித்த மருத்­து­வர்­கள் பால் ராம்­சங்­கர், சோம­சுந்­தர் இரு வரும் இடை­நீக்­கம் செய்­யப்­பட்டு, தலை­ம­றை­வாகி உள்­ள­னர்.

வெளிப்­ப­டை­யான விசா­ரணை

இது­கு­றித்து சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், "பிரி­யா­வின் மர­ணத்­தில் அனை­வர் மீதும் ஒரே மாதி­ரி­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படாது. கவ­னக்­கு­றை­வாக செயல்­பட்ட அனை­வ­ரது மீதும் அவ­ர­வர் எடுத்­துக்­கொண்ட பொறுப்­புக்கு ஏற்ப நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என்று கூறி­னார்.

பிரியா மர­ணம் தொடர்­பான விசா­ரணை அறிக்­கையை மருத்து­வக் கல்வி இயக்குநர­கம், காவல்­து­றை­யி­டம் ஒப்­ப­டைத்­துள்­ளது.

அதில், பிரி­யா­வுக்கு மயக்க மருந்து செலுத்­திய மருத்­து­வர், பணி­யில் இருந்த தாதி­யர், சுழற்சி முறை­யில் பணி­யில் இருந்த மருத்­து­வர்­கள் அனைவருமே கவ­னக்­கு­றை­வாகச் செயல்பட்­ட­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மருத்­துவ அறிக்­கை­யில் குற்­றம் சாட்­டப்­பட்­டுள்ள அனை­வ­ருக்­கும் அழைப்­பா­ணை­ அனுப்­பப்­பட உள்­ளது. அந்த அழைப்­பா­ணைக்கு முன்­னி­லை­யா­கா­த­வர்­கள் மீது காவல்­துறை கைது நட­வ­டிக்கை மேற்­கொள்­ளும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பிரியா பெய­ரில் காற்­பந்­துப் போட்டி

பிரியா இறப்­புக்கு அரசு பொறுப்­பேற்க வேண்­டும் என்று கூறி­யுள்ள தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை, "பிரி­யா­வின் பெய­ரில் ஒரு மிகப்­பெ­ரிய காற்­பந்­தாட்­டப் போட்­டியை நடத்­தப் போகி­றோம். 10 வீராங்­க­னை­கள் காற்­பந்­தாட்டப் பயிற்சி பெற பாஜக முழு செல­வை­யும் ஏற்­கும்," என்­று தெரி­வித்தவர், முதல்­வ­ரின் சொந்­தத் தொகு­தி­யில் உள்ள அரசு மருத்­து­வ­ம­னை­யில் இத்தவறு நடந்­துள்­ளதால் அதற்கு மருத்­து­வத் துறை அமைச்­சர் பொறுப்­பேற்க வேண்­டாமா? என்று வினா எழுப்­பி­யுள்­ளார்.