அறுவர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு

அறுவர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு

1 mins read
6b2556b5-c8fb-4b40-9ac7-7095f7f1e707
-

புது­டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி உட்­பட ஆறு பேரை­யும் விடு­தலை செய்­ய­லாம் என நவம்­பர் 11ஆம் தேதி­யன்று உச்ச நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­திருந்த நிலையில், இந்த உத்­த­ரவை மறு ஆய்வு செய்­ய­வேண்­டும் என மத்­திய அரசு சீராய்வு மனுத் தாக்­கல் செய்­துள்­ளது.

உச்ச நீதி­மன்றத் தீர்ப்­புக்கு எதி­ரா­கத் தாக்­கல் செய்­யப்­பட்டுள்ள மனு­வில், தங்­கள் தரப்பைக் கேட்­கா­மல் இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது என மத்­திய அரசு தெரி­வித்துள்ளதாகக் கூறப்­ப­டு­கிறது. அத்துடன், மத்­திய அர­சின் இந்த சீராய்வு மனு மீது விரை­வில் விசா­ரணை நடை­பெறும் என்­றும் சொல்­லப்­ப­டு­கிறது.