கரும்புத் தோட்டத்தில் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு

கரும்புத் தோட்டத்தில் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு

1 mins read
d0ce4a22-2e6d-4688-a639-d6aca85d30c5
விவசாயத் தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உயரமான சிவலிங்கத்திற்கு சிவனடியார்கள் பாலாபிஷேகம் செய்கின்றனர். இந்தப் பழமையான சிவலிங்கத்திற்கு நாமக்கல், கரூர் மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த சிவனடியார்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். படம்: தமிழக ஊடகம் -

பர­மத்­தி­வே­லூர்: நாமக்­கல் மாவட்­டம், பர­மத்­தி­வே­லூர் அருகே விவ­சாய நிலத்­தில் பழ­மை­யான சிவ­லிங்­கம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

சாணார்­பா­ளை­யம் பகு­தி­யைச் சேர்ந்த நட­ராஜ் என்ற விவ­சா­யி­யின் கரும்­புத் தோட்­டத்­தில் இந்த 11 அடி உய­ர­முள்ள சிவ­லிங்­கம் கண்­டு­பிடிக்­கப்­பட்டு உள்­ளது. மண்­ணிற்கு மேல் 8 அடி­யும் மண்­ணிற்­குக் கீழ் 3 அடி­யும் கொண்­ட­தாக இந்­தச் சிவ­லிங்­கம் உள்­ளது.

இந்த லிங்­கம் சூத்­தி­ரக் குறி­யீட்­டு­டன் காவிரி ஆற்றை பார்த்­த­வாறு கிழக்கு நோக்­கி­யும் லிங்­கத்­தின் மேல்­ப­குதி தட்­டை­யா­க­வும் உள்­ளது.

ஒரு காலத்­தில் இவ்­வி­டத்­தில் மிகப்­பெ­ரிய சிவா­ல­யம் இருந்­தி­ருக்­க­லாம் என்­றும் லிங்­கத்­தின் அமைப்­பை­யும் பிற சூத்­தி­ரக் குறி­யீட்­டை­யும் வைத்­துப் பார்க்­கும்­போது ஏறக்­கு­றைய 6ஆம் நூற்­றாண்­டுக்கு முற்­பட்ட சிவ­லிங்­க­மாக இது இருக்­க­லாம் என்­றும் தொல்­லி­யல் ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

ஆந்­திர மாநி­லத்­தில் உள்ள குடி­மல்­லம் சிவ­லிங்­கம்­தான் பழ­மை­யா­னது என்று கருதி வந்த நிலை­யில், தமி­ழ­கத்­தில் உள்ள இந்­தச் சிவ­லிங்­கம் உய­ர­மான, பழ­மை­யான சிவ­லிங்­க­மாக இருக்­க­லாம் என்­றும் கரு­து­கின்­ற­னர்.

"கடந்த 22 வரு­ட­மாக நான் விவ­சா­யம் செய்து வரு­கி­றேன். அப்­போது இது சிவ­லிங்­கம் என்று எனக்­குத் தெரி­யாது. பாண்­டி­யன் நட்ட கல் என்று கூறி­னர். ஆய்வு செய்த சிலர் இது பழ­மை­யான சிவ­லிங்­கம் என்று உறு­திப்­ப­டுத்­தி­னர்," என்று நட­ராஜ் கூறியுள்ளார்.