கோவை: கைப்பேசி கடை உரிமையாளர் ஒருவர், அடுத்தடுத்து மூன்று பெண்களைத் திருமணம் செய்து, அதுகுறித்து மூவருக்கும் தெரியாத வகையில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், ஒரு சமயத்தில் அவர் பிரச்சினையில் சிக்கிக்கொள்ள, தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் என மூன்று மனைவிகளும் காவல்நிலையத்தில் கூறிவிட்டனர்.
இதையடுத்து, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், இப்போது மூன்று மனைவிகளும் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டனர்.
கோவை மாவட்டம், ஊஞ்சப்பாளையத்தைச் சேர்ந்தவர் போசனகுமார், 28. கைப்பேசி கடை நடத்தி வரும் அவருக்குத் திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில், ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவரையும் பொள்ளாச்சியைச் சேர்ந்த தனது நண்பரின் தங்கையையும் திருமணம் செய்துகொண்டு உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
ஒரு சமயம் ஐதராபாத் பெண் தான் கொடுத்த ரூ.10 லட்சத்தைக் கேட்க, பிரச்சினை காவல்நிலையம் சென்றது. விசாரணையில் போசனகுமாரின் மூன்று திருமணம் வெளிச்சத்துக்கு வந்தது.
ஐதராபாத் பெண் தன் பணத்தைத் திருப்பிக் கொடுத்தால் பிரிந்து செல்வதாகக் கூறிச் சென் றார். பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண், போசனகுமாருக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி, பிள்ளை இருப்பது தெரியாது எனக் கூறி கைவிட்டுச் சென்றார்.
முதல் மனைவியும் தன் கணவர் பல பெண்களுடன் வாழ்ந்தது வேதனையானது எனக் கூறி தாய்வீடு சென்றுவிட்டார்.

