சென்னை வந்த 22 தமிழர்கள் மியன்மார், கம்போடியா, தான்சானியா நாடுகளில் சிக்கித் தவித்தவர்கள் மீட்பு

சென்னை வந்த 22 தமிழர்கள் மியன்மார், கம்போடியா, தான்சானியா நாடுகளில் சிக்கித் தவித்தவர்கள் மீட்பு

2 mins read
a05c86f1-bb85-4e76-987c-174157d04a2c
மியன்மார், கம்போடியா, தான்சானியாவில் சிக்கித்தவித்த 22 தமிழர்கள் சென்னை திரும்பினர். அவர்களை வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான். படம்: ஊடகம் -

சென்னை: மியன்­மார், கம்­போ­டியா, தான்­சா­னியா ஆகிய நாடு­களில் பணி­பு­ரி­வ­தற்­கா­கச் சென்று, அங்கு சரி­யான வேலை கிடைக்­கா­மல் பெரும் அவ­திப்­பட்டு வந்த 22 பேர் மீட்­கப்­பட்டு தமி­ழ­கம் திரும்பி உள்­ள­னர்.

சென்னை அனைத்­து­லக விமா­ன­ நி­லை­யத்­தில் அவர்­களை வர­வேற்ற வெளிநா­டு­வாழ் தமி­ழர் நலத்­துறை அமைச்­சர் செஞ்சி மஸ்­தான் அவ­ர­வ­ரின் சொந்த ஊர்­க­ளுக்கு அனுப்­பி வைத்­தார்.

படித்த இளை­ஞர்­க­ளி­டம் லட்­சக் கணக்­கில் பணத்­தைப் பெற்­றுக் கொண்டு தக­வல்­தொ­ழில் நுட்­பத் துறை­யில் பணி வழங்­கு­வ­தா­கக் கூறி அவர்­களை போலி முகவர்கள் தாய்­லாந்து நாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், தாய்லாந்தில் சரி­யான வேலை வழங்கப்படாமல் அங்கி ருந்து மியன்­மார், தான்சானியா நாடு­க­ளுக்­கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்­நி­லை­யில், வெளி­நா­டு­களில் தங்­க­ளது பிள்­ளை­கள் சித்திரவதை களை அனுபவித்து வருகின்றனர் என்றும் அவர்களை மீட்­க­வேண்­டும் என்றும் பெற்­றோர் பல­ரும் முதல்­வர் மு.க.ஸ்டா­லி­னுக்கு கோரிக்கை வைத்­த­னர்.

இதை­ய­டுத்து, இந்­தி­யத் தூத­ரகத்தின் உத­வி­யு­டன் மாநில அர­சின் வெளிநாடு­வாழ் தமி­ழர்­கள் நலத்­துறை மூலம் அண்­மை­யில் இரு கட்டங்களாக 26 பேரும் இப்­போது மூன்­றா­வது கட்­ட­மாக 22 பேரும் மீட்­கப்­பட்­டுள்ளனர்.

இது­கு­றித்து அமைச்­சர் செஞ்சி மஸ்­தான் கூறி­ய­போது, "போலி முகவர்­க­ளின் ஆசை­வார்த்­தை­களை நம்பி கம்­போ­டியா, மியன்­மார் ஆகிய நாடு­க­ளுக்­குச் சென்ற தமிழக இளை­ஞர்­களைச் சட்­ட­விரோ தக் காரி­யங்­களில் ஈடுபடும்­படி துன்­பு­றுத்தி உள்ளனர். இவர்களை மீட்டதுபோல் வெளிநாடுகளில் தவித்து வரும் மேலும் சிலரை மீட்­கும் பணியும் தொடர்ந்து வரு­கிறது," என்­றார்.

'உயிர் பிழைத்ததே பெரிய காரியம்'

தமி­ழ­கம் திரும்­பிய இளை­யர்­கள் கூறு­கை­யில், ''ஏழ்­மைச் சூழ லால் மியன்மாருக்கு வேலைக்குச் சென்­றோம். ஆனால், அங்கிருந்து உயிர்­பி­ழைத்து வந்­ததே பெரிய காரியமாக நினைக்­கி­றோம். எங்க ளுக்கு மறு­பி­ற­வி கிடைத்துள்ளது. எங்களைச் சட்டவிரோ­த­ வேலை களில் ஈடுபட வைத்­து துன்புறுத்தி னர். 17 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யாவிடில் தண்­டனை தரு­வார்­கள். ஒரு வேளை மட்­டுமே உணவு தந்து அறை­யில் அடைத்து வைத்­த­னர். பல கொடு­மை­களில் சிக்­கிய எங்­களைக் காப்­பாற்­றிய தமி­ழக அர­சுக்கு நன்றி.

"எங்­களது படிப்­புக்கு ஏற்ற வகையில் அரசு வேலை வாய்ப்பை ஏற்­ப­டுத்தித் தரவேண்­டும்," என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.