கலையை பற்றி தெரியாதோருக்கு கலைமாமணி விருது: நீதிபதிகள்

கலையை பற்றி தெரியாதோருக்கு கலைமாமணி விருது: நீதிபதிகள்

2 mins read
1329030d-c400-48e0-a581-8a9b0d3377ad
-

மதுரை: கலை­யைப் பற்றி தெரி­யாத வர்­க­ளுக்கு கலை­மா­மணி விருது வழங்­கப்­ப­டு­வ­தாக சென்னை உயர் நீதி­மன்ற மதுரை கிளை நீதி­ப­தி­கள் விமர்­சித்துள்­ள­னர்.

"பொது­வாக கலைத்­து­றை­யில் சாதனை படைப்­ப­வர்­க­ளுக்கு மட்­டுமே கலை­மா­மணி விருது வழங்­கப்­ப­டு­கிறது. ஆனால், தற்­போது இரண்டு மூன்று படங்களில் நடித்­து­விட்­டால் விருது வழங்­க­லாம் என்ற நிலை உள்­ளது," என்று நீதி­பதி­கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

தகு­தி­யில்­லா­த­வர்­க­ளுக்கு கலை மாமணி விருது வழங்­கு­வது தொடர்ந்­தால் இயல், இசை, நாடக மன்­றத்­தைக் கலைக்க உத்­த­ர­விட நேரி­டும் எனவும் நீதிமன்றம் எச்­சரித்­துள்­ளது.

சென்னை உயர்­நீ­தி­மன்ற மது­ரைக் கிளை­யில் திரு­நெல்­வேலி யைச் சேர்ந்த சமுத்­தி­ரம் என்­ப­வர் பொது நல வழக்­குத் தொடர்ந்­தார்.

"சென்­னை­யில் 2019-2020ஆம் ஆண்­டுக்­கான கலை­மா­மணி விரு துகள் 2021ல் மொத்­த­மாக வழங்­கப்பட்­டன.

"அவ­சர கதி­யில் தகு­தி­யில்லா தவர்­க­ளுக்­கும் கலை­மா­மணி விரு துகள் கொடுக்­கப்­பட்­டன. இயல், இசை, நாடக மன்­றத்­தின் உறுப்­பி­னர் செய­லர், தலை­வ­ரின் கையெ­ழுத்து இல்லாமல் சான்­றி­தழ்­கள் வழங்­கப்பட்­டன.

"இத­னால் தகு­தி­யில்­லா­த­வர் களுக்கு வழங்­கப்­பட்ட விரு­து­களைத் திரும்­பப்­பெற உத்­தரவிட வேண்­டும்," என்று மனு­வில் சமுத்­தி­ரம் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இவ்­வ­ழக்கை நீதி­ப­தி­கள் ஆர்.மகா­தே­வன், ஜெ.சத்ய நாரா­யண பிர­சாத் அமர்வு விசா­ரித்­தது.

நீதி­ப­தி­கள் கூறும்­போது, "கலை­கள் பற்றி தெரி­யா­த­வர்களுக்­குக் கலை­மா­மணி விருது வழங்­கப்­படு­வ­தன் மூலம் விரு­துக்கான மரி­யா தையே இல்­லா­மல் போய்­விட்­டது," என்று கூறி­னர்.

எதன் அடிப்­ப­டை­யில் கலை மாமணி விருது வழங்­கப்­ப­டு­கிறது? விரு­துக்கு எவ்­வாறு கலை­ஞர்­கள் தேர்வு செய்­யப்­ப­டு­கின்­ற­னர்? என்று கேள்வி எழுப்­பிய நீதி­ப­தி­கள் "2021ல் கலை­மா­மணி விருது வழங்­கி­யது குறித்­தும் தற்­போது வழங்­கப்­பட்ட இவ்விருதுகள் குறித்­தும் தமி­ழ­கச் சுற்­றுலா, கலைத்­து­றைச் செய­லா­ளர், தமி­ழக இயல், இசை, நாடக மன்­றத் தலை­வர், செய­லர் ஆகி­யோர் பதி­ல­ளிக்க வேண்­டும்," என உத்­த­ர­விட்டு, விசா­ர­ணையை இம்­மா­தம் 28ஆம் தேதிக்கு ஒத்­தி­வைத்­த­னர்.