ஐந்து மாதங்களில் 255 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தம் என அதிகாரிகள் தகவல்

ஐந்து மாதங்களில் 255 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தம் என அதிகாரிகள் தகவல்

2 mins read
eb5220c9-c34d-48ae-ab0b-c71627d834c7
-

சென்னை: சிறார் திரு­ம­ணங்­களை நிறுத்­து­வ­தற்கு தமி­ழக அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரும் நிலை­யில், கடந்த 11 மாதங்­களில் மட்­டும் 255 சிறார் திரு­ம­ணங்­கள் தடுத்து நிறுத்­தப்­பட்­டுள்­ளன. அதே­ச­ம­யம் 511 மாண­வி­க­ளுக்­குத் திரு­ம­ணம் நடை­பெற்­றுள்­ள­தாக பள்ளி கல்­வித்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் சிறார் திரு­ம­ணங்­கள் குறித்து தனி­யார் அமைப்பு ஒன்று அண்­மை­யில் ஆய்வு மேற்­கொண்­டது.

இதில், கொரோனா நெருக்­கடி காலத்­துக்­குப் பிறகு சுமார் 16 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட சிறார்­கள் பள்­ளிக்கு வர­வில்லை என்­பது தெரி­ய­வந்­தது.

மேலும், இந்த மாண­வர்­களில் 511 பேருக்கு திரு­ம­ணம் நடந்­துள்ள தாக­வும் கூறப்­ப­டு­கிறது.

தமி­ழக பள்ளி கல்­வித்­துறை மாண­வர்­க­ளின் இடை­நிற்­ற­லைத் தவிர்க்­கும் வகை­யில் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறது.

அதன்­படி, மாண­வர்­களை தொடர்­பு­கொள்ள முயன்­ற­போது தான் இந்த அதிர்ச்­சி­யூட்­டும் தக­வல் தெரிய வந்­த­தாக அதி­கா­ரி­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

மேலும் எட்­டாம் வகுப்பு பயின்று வந்த மாண­விக்­கும்­கூட திரு­ம­ணம் நடந்­துள்­ள­தாக அவர்­கள் கூறு­கின்­ற­னர்.

கள்­ளக்­கு­றிச்சி, கிருஷ்­ண­கிரி, திரு­வண்­ணா­மலை, விழுப்­பு­ரம், விரு­து­ந­கர் மாவட்­டங்­க­ளில்­தான் சிறார் திரு­ம­ணங்­கள் அதிக எண்­ணிக்­கை­யில் நடந்­துள்­ள­தாக பள்­ளி­கல்­வித் துறை தெரி­வித்­தது.

கடந்த 11 மாதங்­களில் 511 சிறார் திரு­ம­ணங்­கள் நடந்­துள்ள நிலை­யில், இது தொடர்­பாக காவல்­துறை உத­வி­யு­டன் விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது. மேலும் பல்­வேறு சிறார் திரு­ம­ணங்­களை சமூக நலத்­துறை அதி­கா­ரி­கள் தடுத்து நிறுத்தி உள்­ள­னர்.

வேலூர் மாவட்­டத்­தில் மட்­டும் கடந்த ஜன­வரி மாதம் முதல் நவம்­பர் மாதம் வரை 83 சிறார் திரு­ம­ணங்­கள் தடுத்து நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

திருப்­பத்­தூர் மாவட்­டத்­தில் 37 சிறார் திரு­ம­ணங்­களும் ராணிப்­பேட்டை மாவட்­டத்­தில் 107, திரு­வண்­ணா­ம­லை­யில் 28 சிறார் திரு­ம­ணங்­களும் தடுத்து நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

மொத்­தம் 4 மாவட்­டங்­களில் 255 குழந்தை திரு­ம­ணங்­கள் தடுத்து நிறுத்­தப்­பட்­டுள்­ளன என்­றும் தமி­ழ­கத்­தின் இதர பகு­தி­க­ளி­லும் இது தொடர்­பான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.