வாடகை வீடுகளில் குடியிருப்பதற்கு தலா ரூ.24,000 நிவாரணம் ஏழைகளுக்கு ரூ.2,080 கோடியில் குடியிருப்பு

வாடகை வீடுகளில் குடியிருப்பதற்கு தலா ரூ.24,000 நிவாரணம் ஏழைகளுக்கு ரூ.2,080 கோடியில் குடியிருப்பு

2 mins read
027e21ed-6be1-4e67-93df-c56870a3df5a
-

சென்னை: மாநிலத்தில் உள்ள ஒரு லட்­சத்து 60,000 பழைய குடிசை மாற்று வாரிய வீடு­களை இடித்­து­விட்டு, ஏழை மக்கள் பயனடையும் வகையில் ரூ.2,080 கோடி­யில் புதிய வீடு­கள் கட்­டித் தரப்­பட உள்­ள­தாக மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

இந்த வீடு­க­ளைக் கட்டி முடிப்­பதற்கு 18 மாதங்­கள் ஆகும் என்­ப­தால், அது­வரை அங்கு வசித்­த­வர்­கள் வாடகை வீடு­களில் வசிக்க வேண்­டி­யி­ருக்­கும். இதற்கு ஏதுவாக குடி­யி­ருப்­பா­ளர்­களுக்கு ரூ.24,000 நிவா­ர­ண­மாக வழங்க உள்­ள­தா­க­வும் அமைச்­சர் மேலும் தெரி­வித் தாா்.

சென்னை சைதாப்­பேட்­டை­யில் உள்ள காந்­தி­பு­ரம் பகு­தி­யில், சென்னை மாந­க­ராட்சி, பொது சுகா­தா­ரத் துறை சார்­பில் விலை­யில்லா கொசு­வ­லை­களை வழங்­கும் நிகழ்ச்சி நடை­பெற்­றது.

இந்­நி­கழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு அமைச்­சர் மா.சுப்­பி­ர­மணி­யன் பேசி­ய­போது, "குடிசை மாற்று வாரி­யத்­தின் பழைய குடி­யி­ருப்­பு­களை இடித்­து­விட்டு, புதி­தாக கட்­டித்­ த­ரு­வ­தற்கு 18 மாதங்­கள் எடுக்­கும். அந்­தச் சம­ய­த்­தில் குடி­யி­ருப்­பா­ளர்­கள் வாட­கைக்கு இடம் தேட வேண்­டி­யி­ருக்­கும்.

"இது­போன்ற தரு­ணங்­களில் பாதிக்­கப்­படும் குடும்­பங்­க­ளுக்கு கடந்த ஆட்­சி­யில் ரூ.8,000 மட்­டுமே நிவா­ர­ண­மாக வழங்­கப்­பட்டு வந்த நிலை­யில், தமிழக அரசு அதனை ரூ.24 ஆயி­ர­மாக உயர்த்தி வழங்­க உள்ளது.

"அத்­து­டன், சென்­னை­யில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடி­யி­ருப்­பு­கள் 280 சதுர அடி­கள் மட்­டுமே இருந்­தன. தற்­போ­தைய சூழ­லில் இவ்­வ­ளவு சிறிய வீட்­டில் குடி­யி­ருப்பது மிகவும் சிரமம் என்­பதால், ஒவ்­வொரு குடி­யி­ருப்­பை­யும் 420 சதுர அடி­யில் கட்­டித்­தர மாநில அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.

"ஒவ்­வொரு குடி­யி­ருப்­பும் ரூ.13 லட்­சத்­தில் கட்­டப்­ப­டு­கிறது. இதில், ரூ.1.50 லட்­சத்தை மத்­திய அர­சும் சம்­பந்­தப்­பட்ட குடி­யி­ருப்­பா­ளர்­கள் ரூ.1.50 லட்­ச­மும் கொடுக்­கின்­ற­னர்.

"மீத­முள்ள ரூ.10 லட்­சத்தை தமி ­ழக அரசு அளிக்­கிறது," என்று தெரிவித்தார்.