உலக நாடுகளுக்கு 80% ஏற்றுமதியாகும் முருங்கை

உலக நாடுகளுக்கு 80% ஏற்றுமதியாகும் முருங்கை

1 mins read
42fad22d-b5c8-4ab0-8768-145c59f7474e
'குருஷ்' ரக முருங்கையை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தர்மலிங்கம். இந்த ரக முருங்கைக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படாது. காய்கள் நீளமாகவும் நுனி வளையாமலும் இருக்கும் என்றும் கூறும் அவர், தக்க சமயத்தில் உரம், பருவத்தில் பராமரிப்பு என கண்ணும் கருத்துமாக இருந்தால் நல்ல வருமானம் சாத்தியம் என்கிறார்.படம்: ஊடகம் -

ஒட்­டன்­சத்­திரம்: இந்­தி­யா­வில் இருந்து 80 விழுக்­காடு அள­வுக்கு உலக நாடு­க­ளுக்கு முருங்­கைக் காய் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­வ­தாக நெதர்­லாந்­தின் முருங்­கைக்­காய் இறக்­கு­ம­தி­யா­ளர் லட்சும­ணன் ராமு தெரி­வித்­துள்­ளார்.

திண்­டுக்­கல் மாவட்­டம், ஒட்­டன் சத்­தி­ரத்­தில் வேளாண், தோட்­டக் கலைத் துறை சார்­பில் நடத்தப்பட்ட கூட்­டத்தில் அவர் இத்தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

கூட்­டத்­தில் உண­வுத்­துறை அமைச்­சர் சக்­க­ர­பாணி பேசிய போது, "தமி­ழ­கத்­தில் திண்­டுக்­கல், திருப்­பூர், கரூர், அரி­ய­லூர், மதுரை, தேனி, தூத்­துக்­குடி ஆகிய ஏழு மாவட்­டங்­களும் முருங்­கைக்­காயை அதிக அள­வில் ஏற்­று­மதி செய்து வருகின்றன.

"இயற்கை முறை­யில் சாகு­படி செய்­யப்­படும் முருங்­கைக்கு வெளி நாடு­களில் நல்ல வர­வேற்பு இருப்­ப­தால் அதற்கான தொழில்நுட்­பங்­களை அறிந்து முருங்கை விவ­சா­யத்தை அதிகரிக்க விவசாயிகள் ஆர்வம் காட்­ட­வேண்­டும்," என்றார்்.

நெதர்­லாந்­தைச் சேர்ந்த முருங்கைக்காய் இறக்­கு­ம­தி­யா­ளர் லட்சும­ணன் ராமு கூறுகையில், "இந்தியாவில் இருந்து உலக நாடு­களுக்கு 80 விழுக்காடு முருங்கைக் காய் ஏற்­று­ம­தி­யா­கிறது.

"அதேபோல், ஐரோப்பா, அமெ­ரிக்கா போன்ற நாடு­கள் இந்தியா விடம் இருந்து முருங்கை விதை­களை வாங்கி தங்கள் நாடுகளில் சாகு­படி செய்து முருங்­கைப் பொடி, இலை உள்­ளிட்­ட­வற்றை மற்ற நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­கின்­றன. எதிர்வரும் 2025ஆம் ஆண்­டில் முருங்­கை­யின் சந்தை மதிப்பு ரூ.85,000 கோடியாக இருக்கும்.

"அமெ­ரிக்கா, ஆப்­பி­ரிக்­கா­வில் முருங்கையில் உள்ள சத்துகள் குறித்து விளக்குவதற்கு முருங்கைத் தூது­வர்­கள் இருப்பதைப் போல் இந்­தி­யா­விலும் முருங்கை பற்­றிய விழிப்­பு­ணர்வை அதி­க­ரிக்க வேண்­டும்," எனத் தெரிவித்தார்.