மயக்க மருந்து செலுத்தப்பட்ட இளைஞர் உயிரிழப்பு; பதற்றம்; காவலர்கள் குவிப்பு

1 mins read
c510703b-8939-44df-8577-00b81c91dacb
-

கட­லூர்: கட­லூ­ரில் மூக்கு தசையை அறுவை சிகிச்சை செய்து அகற்­று­வ­தற்­காக தனி­யார் காது மூக்கு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட இளை­ஞர் ஒரு­வர் திடீ­ரென உயி­ரி­ழந்­தார்.

இந்த அதிர்ச்­சித் தக­வ­லைக் கேட்டு இளை­ஞ­ரின் உற­வி­னர்­கள் மருத்­து­வ­ம­னை­யில் குவிந்­த­னர்.

இத­னால் பதற்­றம் நில­வவே, மருத்­து­வ­ம­னை­யில் காவ­லர்­கள் குவிக்­கப்­பட்­ட­னர்.

கள்­ளக்­கு­றிச்­சி­யைச் சேர்ந்­த­வர் கோவிந்­த­ராஜ். இவர் மூக்கு தசையை அகற்­று­வ­தற்­காக கட­லூர் மாவட்­டம், மஞ்­சக்­குப்­பத்­தில் உள்ள மருத்­து­வ­ம­னை­யில் அனு­மதிக்­கப்­பட்­டார்.

இதை­ய­டுத்து, அறுவை சிகிச்­சைக்கு முன்பு அளிக்­கப்­படும் மயக்க மருந்து செலுத்­தி­ய­வு­டன் அவர் சுய­நி­னைவை இழந்­துள்­ளார். அத்­து­டன், அவ­ரது உடல்­நி­லை­யும் மோச­மாகி உள்­ளது.

இத­னால் அதிர்ச்­சி­ய­டைந்த மருத்­து­வர்­கள், அவரை வேறு மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லும்­படி கூறி­யுள்­ள­னர். இதைக் கேட்டு அதிர்ந்து போன குடும்­பத்­தி­னர், கோவிந்­த­ராஜை வேறு மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­ற­போது உயி­ரி­ழந்­தார்.

இந்­நி­லை­யில், கோவிந்­த­ரா­ஜின் உயி­ரி­ழப்­பிற்கு மருத்­து­வர்­க­ளின் அலட்­சி­யமே கார­ணம் என்­றும் தவ­றான சிகிச்சை அளித்­த­தால் தான் அவர் உயி­ரி­ழந்­தார் என்­றும் குற்­றம்­சாட்டி வரு­கின்­ற­னர்.

ஏற்­கெ­னவே கால் அறுவை சிகிச்­சையால் பெண் உயி­ரி­ழந்­தார். மூக்கு அறுவை சிகிச்­சைக்கு சென்ற பெண் கண் பார்வை இழந்­தார் என தக­வல்­கள் வெளி­வரும் நிலை­யில், இளை­ஞர் உயி­ரி­ழந்­தது பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.