கழிவறையில் ரூ.10½ லட்சம் தங்கம் மீட்பு

1 mins read
43c44a53-76bc-41dc-9b11-3858692de500
-

திருச்சி: திருச்சி விமான நிலை­யத்­திற்கு வந்த விமா­னத்­தின் கழி­ வ­றை­யில் கிடந்த பத்­தரை லட்­சம் ரூபாய் மதிப்­பி­லான கடத்­தல் தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் இருந்து வந்த இண்­டிகோ விமா­னத்­தில் இருந்த பய­ணி­கள் அனை­வ­ரும் இறங்­கிய பின்­னர், விமான நிறு­வ­னப் பணி யாளர்­கள் விமா­னத்தை சுத்­தம் செய்­யும் பணி­யில் ஈடு­பட்­ட­னர்.

அப்­போது அந்த விமா­னத்­தின் கழி­வ­றை­யில் பொட்­ட­லம் இருப்­ப­தைக் கண்டு சுங்­கத்­துறை அதி­கா­ரி­க­ளுக்கு தக­வல் தெரி­வித்­த­னர். அதி­கா­ரி­க­ளின் சோத­னை­யில், ரூ.10 லட்­சத்து 60 ஆயி­ரம் மதிப்­பி­லான இரண்டு தங்­கக் கட்­டி­கள் இருந்­தது தெரியவந்தது.

சிங்­கப்­பூ­ர் பயணி சுங்­கத்­துறை அதி­கா­ரி­க­ளி­டம் சிக்கி விடு­வோமோ என்ற அச்­சத்­தில் கழி வறையில் விட்­டுச் சென்­றி­ருக்­க­லாம் என்று சந்­தே­கிக்­கின்­ற­னர்.