'மக்களின் மகிழ்ச்சியே சரியான அளவீடு' என்கிறார் முதல்வர்

'மக்களின் மகிழ்ச்சியே சரியான அளவீடு' என்கிறார் முதல்வர்

1 mins read
7ca8fb5d-d0f5-4754-90c3-8a847287bc7d
-

சென்னை: அர­சின் திட்­டங்­கள் கடைக்­கோடி மக்­க­ளை­யும் சென்­றடைய வேண்­டும் என்­பதே தமது அர­சின் நோக்­கம் என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

பல்­வேறு திட்­டங்­கள் தொடர்­பான பணி­கள் தொடர்­பில் நடை­பெற்ற ஆய்­வுக் கூட்­டத்­தில் பேசிய அவர், மத்­திய அர­சின் பங்­க­ளிப்­புடன் 15 துறை­க­ளின் மூலம் செயல்­ப­டுத்தப்­படும் 41 திட்­டங்­களைக் கண்­கா­ணிக்க மாநில அள­வில் வளர்ச்சி, ஒருங்­கி­ணைப்பு, கண்­கா­ணிப்­புக் குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது என்றார்.

"அனை­வ­ருக்­கு­மான வளர்ச்சி, அனைத்­துத் துறை­க­ளி­லும் வளர்ச்சி என்ற நோக்­கத்­தோடு தமி­ழக அரசு செயல்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கிறது.

"பொரு­ளா­தாரக் குறி­யீ­டு­க­ளைக் கொண்­ட­தாக மட்­டும் வளர்ச்சி என்பது தீர்­மா­னிக்­கப்­ப­டா­மல், மக்களின் வாழ்க்­கைத்­த­ரம், மகிழ்ச்சி ஆகி­ய­வற்றை அள­வீ­டு கொண்­ட­தாக தீர்­மா­னிக்­க­ வேண்டும் என்­பதே அர­சின் எண்­ணம்.

"இந்த நோக்­கத்­தில் இம்­மி­அளவும் மாறா­மல் மேல் நோக்கிய பாய்ச்­ச­லில் அர­சின் எண்­ண­மானது நிறை­வேறி வரு­கிறது. இதில் மிக முக்­கி­ய­மா­னவை கிரா­மப்­புற வளர்ச்சித் திட்­டங்­கள் ஆகும். எனவே தமிழக அரசு இது தொடர்பான திட்டங்களில் கவனம் செலுத்தும்," என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

கிரா­மப்­புற மக்­க­ளின் வாழ்­வா­தா­ரம், கட்­ட­மைப்பு வச­தி­களில் சிறப்பு கவ­னம் செலுத்­தும் நோக்­கோடு அரசின் ஆய்­வுக் கூட்­டங்கள் நடத்­தப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், மாநி­லத்­தின் வளர்ச்­சிக்கு, குறிப்­பாக ஊர­கப் பகு­தி­க­ளின் வளர்ச்சிக்குத் தேவை­யான அனைத்து ஆலோ­சனை­க­ளை­யு­ம் அதி­கா­ரி­கள் கருத்தில் கொள்ள வேண்­டும் என வலி­யு­றுத்­தி­னார்.