சென்னை: மூத்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் (படம்) காலமானார். அவருக்கு வயது 85.
வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக குடும்பத்தார் தெரிவித்தனர்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலை பட்டம் பெற்ற அவர், கடந்த 1992 முதல் 1995 ஆம் ஆண்டு வரை தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பு வகித்தார்.
பிறகு, 2014ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராக இருந்தார். 2011ஆம் ஆண்டு அவ்வை நடராஜனுக்கு நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கி கௌரவித்தது.

