பள்ளியில் பாலியல் தொல்லை; பெற்றோர் போராட்டம்; தாளாளர் மீது வழக்குப் பதிவு

பள்ளியில் பாலியல் தொல்லை; பெற்றோர் போராட்டம்; தாளாளர் மீது வழக்குப் பதிவு

2 mins read
9e9dd572-c0c6-4d17-9bae-3d1d426211ec
போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். படம்: இந்திய ஊடகம் -

திரு­நின்­ற­வூர்: திரு­நின்­ற­வூர் இ.பி. கால­னி­யில் தனி­யார் மெட்­ரிக்­கு­லே­சன் பள்­ளி­யில் மாண­வி­க­ளுக்கு பாலி­யல் தொல்­லை­கள் ஏற்­பட்­ட­தால் நூற்­றுக்­கும் மேற்­பட்ட பெற்­றோர் திரண்டு வந்து ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

மாண­வி­க­ளுக்­குப் பாடம் தொடர்­பாக ஆலோ­ச­னைக்கு அழைக்­கப்­பட்டு பாலி­யல் தொல்லை கொடுக்­கப்­பட்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது. கடந்த வாரம் வேப்­பம்­பட்டு பகு­தி­யைச் சேர்ந்த மாணவி ஒரு­வ­ருக்கு பள்ளி தாளா­ளர் வினோத் பாலி­யல் தொல்லை கொடுத்த­தா­கச் சொல்­லப்­பட்­டது. இது­பற்றி மாணவி தோழி­க­ளி­டம் தெரி­வித்­த­போது இதே­போல் அவர் மேலும் பல மாண­வி­க­ளுக்கு தொல்லை கொடுத்து இருப்­பது தெரிந்­தது.

இத­னால் அதிர்ச்சி அடைந்த மாண­வி­கள் பள்ளி நிர்­வாகி வினோத்­தின் செயல் குறித்து தங்­க­ளது பெற்­றோ­ருக்குத் தெரி­வித்­த­னர். இந்த நிலை­யில் நேற்று காலை பள்ளி மாணவ-மாண­வி­கள், அவர்­க­ளது பெற்­றோர் என சுமார் 100க்கும் மேற்­பட்­டோர் பள்­ளியை முற்­று­கை­யிட்டு திடீர் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

மாண­வி­க­ளிடம் தவறாக நடந்த நிர்­வாகி வினோத்­தின் செயல்­பாட்டை கண்­டித்து முழக்­கங்­களை எழுப்­பி­னர்.

அவர்­க­ளி­டம் பள்ளி தாளா­ளர் ஜெய­ரா­மன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னார். அவ­ரி­டம் மாண­வி­க­ளின் பெற்­றோர் கடும் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­ட­னர். பின்­னர் பெற்­றோர் சாலை மறி­ய­லில் ஈடு­பட முயற்சி செய்­த­னர்.

இதற்­கி­டையே திரு­நின்­ற­வூர் காவல் ஆய்­வா­ளர் ராதா­கி­ருஷ்­ணன், மற்­றும் காவல்­து­றை­யி­னர் விரைந்து வந்து மறி­ய­லில் ஈடு­பட முயன்ற மாண­வி­க­ளின் பெற்­றோரை தடுத்து நிறுத்­தி­னர். அப்­போது, மாண­வி­க­ளி­டம் தவ­றாக நடந்த வினோத்தை உடனே கைது செய்ய வேண்­டும் என்று பெற்­றோர் கோரிக்கை விடுத்­த­னர். பெற்­றோர் தொடர்ந்து உள்­ளி­ருப்புப் போராட்­டத்­தி­லும் ஈடு­பட்­ட­தால் அப்­ப­கு­தி­யில் பதற்­றம் அதி­க­ரித்­தது. பள்ளி தாளா­ளர் வினோத் பல மாண­வி­களைத் தனி­யாக அழைத்து பாலி­யல் ரீதி­யாக தொந்­த­ரவு கொடுத்து இருப்­ப­தாக குற்­றம்­சாட்­டி­னர்.

ஆனால் நிர்­வாகி வினோத் பள்­ளி­யில் இல்லை என்­றும் அவர் வெளி­யூர் சென்று உள்­ளார் என்றும் தெரி­விக்­கப்­பட்­டது. இந்த நிலை­யில் மாண­வர்­க­ளின் தொடர் போராட்­டத்­தால் பள்ளி தாளா­ளர் வினோத் ஜெய­ரா­மன் மீது 4 பிரிவு­ க­ளின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்யப்­ பட்­ட­தாக காவல் துறையினர் தெரி­வித்­த­னர்.