தேனி: தேனி மாவட்டம், அல்லி நகரத்தில் உள்ள காமராசர் பேருந்து முனையத்தில் ரிசர்வ் வங்கியின் நாடு தழுவிய விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தொடங்கிவைத்தார்.
அதன்பின்னர் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி அவர் பேசிய போது, "வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் வங்கிக்கணக்கை கையாள்வது தொடர்பாக பல்வேறு விழிப் புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
"தெரிந்த பயனாளிகளுக்கு மட்டுமே பணமாற்றம் செய்வது, கடன் பற்று அட்டைப் பயன்பாடு, பரிவர்த்தனைக்குப் பிறகு வரும் குறுஞ்செய்தியில் உள்ள பரிவர்த்தனை தொகை சரியாக உள்ளதா போன்ற தகவல்கள் குறித்து கூறப்பட்டது.
"அத்துடன், இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் 'டிஜிட்டல்' பரிவர்த்தனைகளின் பாதுகாப்பான பயன்பாடு குறித்தும் பொதுமக்களுக்கு கலைநிகழ்ச்சிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது," என ஆட்சியர் முரளிதரன் தெரிவித்தார்.
விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை ஆட்சியர் முரளிதரன் தொடங்கிவைத்து பார்வையிட்டார். படம்: தமிழக ஊடகம்

