மெளனசாமி மடத்தில் நான்கு சிலைகள், ஓவியம் பறிமுதல்

மெளனசாமி மடத்தில் நான்கு சிலைகள், ஓவியம் பறிமுதல்

1 mins read
823c4e86-738e-4226-aaf9-343f5ce9f596
-

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள பழமையான மௌன சாமி மடத்தின் நிர்வாகி பழங்காலச் சிலைகளைப் பதுக்கி வைத்திருப்பதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்குத் தகவல் வந்தது.

இதையடுத்து, ஏடிஎஸ்பி பாலமுருகன் மேற்பார்வையில் மௌனசாமி மடத்தில் சோதனை செய்தபோது, மடத்தின் ஒரு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சில சிலைகளைக் குழுவினர் கண்டுபிடித்தனர். சிலைகளின் ஆதாரத்தை நிரூபிக்குமாறு மடாலய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்களால் ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியவில்லை.

இந்நிலையில், நடராஜர், திருவாச்சியுடன் கூடிய சிவகாமி அம்மன் சிலை, விநாயகர், பாலதண்டாயுத பாணி சிலைகள், 63 நாயன்மார்கள், தஞ்சாவூர் பாணி ஓவியம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.