80 உணவுப்பொருள் விநியோக நிறுவனங்களில் சோதனை

80 உணவுப்பொருள் விநியோக நிறுவனங்களில் சோதனை

2 mins read
d4a5825e-9ce6-44db-8804-6e0a89a7e5b6
-

காஞ்சிபுரம்: சென்­னை­யில் சமையல் எண்ணெய், பருப்பு சார்ந்த பொருள் களை இருப்பு வைக்கும் கிடங்கு களில் வரு­மான வரித்­துறை­யி­னர் இரண்­டா­வது நாளாக நேற்று சோதனை நடத்தினர்.

சென்னை மட்­டுமன்றி காஞ்­சி­பு­ரம், மதுரை, கோவை என்று தமி­ழ­கம் முழு­வ­தும் இந்த நிறு­வ­னங்­க­ளுக்குத் தொடர்புடைய மொத்­தம் 80 இடங்­களில் 350க்கும் மேற்பட்ட வரு­மா­ன­வ­ரித்­துறை அதி­கா­ரி­கள் நேற்று சோத­னை­யில் ஈடு­பட்­டனர்.

தமி­ழக அர­சின் பொங்­கல் பரி சுத் தொகுப்பு வழங்கியதில் ரூ.500 கோடி அளவுக்கு முறை­கேடு நடந்­தி­ருப்­ப­தாக குற்­றச்­சாட்டு எழுந்­தது. இந்தப் புகா­ரி­யின் அடிப்­ப­டை­யில் வரு­மான வரித்­து­றை அதிகாரிகள் சோதனை நடத்தி வரு­கின்­ற­னர்.

தமி­ழ­கத்­தில் பொது விநி­யோ­கத் திட்­டத்­தின் கீழ் பருப்பு, சமை­யல் எண்­ணெய் உள்­ளிட்ட பொருள்­களை அர­சுக்கு விநி­யோ­கம் செய்­யும் நிறு­வ­னங்­கள் வரு­மான வரி ஏய்ப்பு செய்­த­தாக புகார் எழுந்­தது.

அதைத்­தொ­டர்ந்து, சென்னை மண்­ண­டி­யில் உள்ள அரு­ணாச்­ச­லம் இம்­பேக்ஸ் நிறு­வ­னம், தண்­டை­யார்­பேட்­டை­யில் செயல்­பட்டு வரும் காமாட்சி அண்ட் கோ நிறு­வ­னத்­தில் வரு­மா­ன­வ­ரித்­து­றை­யி­னர் சோத­னை­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

இதே­போன்று ஹீரா டிரேடர்ட்ஸ், இண்­ட­கி­ரேட் சர்­வீஸ் புர­வை­டர் உள்ளிட்ட ஐந்து நிறு­வ­னங்­க­ளுக்குச் சொந்­த­மான ஏராளமான இடங்­களில் சோதனை நடை­பெற்று வரு­கிறது. இந்த நிறு­வ­னங்­க­ளுக்குத் தொடர்­பு­டைய இடங்­கள், உரி­மை­யா­ளர்­கள் வீடு­கள், பொருள் ­கள் வைத்­தி­ருக்­கும் கிடங்­கு­கள், அலு­வ­ல­கங்­கள் ஆகி­ய­வற்­றில் சோதனை நடந்து வந்­தது.

காமாட்சி அண்ட் கோ நிறு­வ­னம் பதப்­ப­டுத்­தப்­பட்ட உணவு, உலர் திராட்சை, முந்­திரி, பாதாம், போன்­ற­வற்றை விநி­யோ­கம் செய்து வரு­கிறது. உண­வுப்பொருள் ஏற்­று­மதி இறக்­கு­மதி மொத்த விநி­யோ­க­மும் செய்துவரு­கிறது.