மஞ்சள் பை தானியங்கி இயந்திரங்கள் தொடக்கம்

மஞ்சள் பை தானியங்கி இயந்திரங்கள் தொடக்கம்

1 mins read
e7a2d197-de7f-4b9e-9d93-a00b9e2571ab
-

மதுரை: சமையலுக்கு மஞ்சள் எவ்வளவு நல்லதோ அதேபோல் மஞ்சள் பையைப் பயன்படுத்தினால் சுற்றுச் சூழலுக்கு மிகவும் நல்லது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி மகாதேவன் தெரிவித்துள்ளார்.

"மஞ்சள் மலிந்திருக்க மரணம் தணிந்திருக்கும்," என்ற பழமொழியைக் கூறி தன் கருத்தைத் தெரிவித்த நீதிபதி, மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரங்களையும் தொடங்கி வைத்தார்.