ஏமாற்றத்தில் இரண்டு லட்சம் மக்கள்; தலைமறைவு குறித்து துப்பு கொடுத்தால் பரிசு ரூ.9,038 கோடி நிதி மோசடி

2 mins read
b3ee83ee-f9d1-4d2d-bb54-31fc21c1f317
நிதிச் சேவை நிறுவனங்களை நடத்தி மக்களிடம் பல்லாயிரம் கோடிகளைக் கொள்ளையடித்து தலைமறைவாகி உள்ள குற்றவாளிகள். படம்: தகவல் ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தின் பல்­வேறு இடங்­க­ளி­லும் ஏரா­ள­மான நிதி நிறு­வ­னங்­க­ளைத் தொடங்கி, பொது­மக்­க­ளி­டம் ஆசை வார்த்தை களைக் கூறி ரூ.9,038 கோடியை மூன்று நிதி நிறு­வ­னங்­கள் சுருட்டி உள்­ளன.

இம்­மோ­சடி மூலம் இரண்டு லட்­சம் மக்­கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இந்த மோச­டி­யில் தொடா்பு­டைய எட்­டுப் போ் குறித்து துப்பு கொடுப்பவர்­க­ளுக்கு தக்க சன்­மா­னம் வழங்­கப்­படும் என தமி­ழ­கக் காவல்­துறை அறி­வித்­துள்­ளது.

தக­வல் கொடுப்­ப­வ­ரின் விவ­ரங்­கள் ரக­சி­ய­மா­கப் பாது­காக்­கப்­படும் என­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது­தொ­டர்­பாக தமி­ழக காவல்­துறை தலை­வர் டிஜிபி சைலேந் ­தி­ர­பாபு கூறி­ய­போது, "குறிப்­பிட்ட மூன்று நிறு­வ­னங்­களில் மட்­டும் இரண்டு லட்­சத்­துக்­கும் அதி­க­மான மக்­கள் முத­லீடு செய்­துள்­ள­னர்.

"ஏறக்­கு­றைய 9,000 கோடிக்­கும் மேலாக இந்த நிதி நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ளது கண்ட றியப்­பட்­டுள்­ளது. படிப்­ப­டி­யாக பொது­மக்­கள் இழந்த பணத்தை மீட்­டுத்­தர உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," எனத் தெரி­வித்­தார்.

நிதி நிறு­வ­னங்­க­ளின் மோசடி குறித்து தமி­ழ­கக் காவல்­துறை வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் நிதி நிறு­வ­னங்­க­ளைத் தொடங்கி, இது­கு­றித்து கூட்­டங்­கள் நடத்தி பொது­மக்­க­ளைக் கவ­ரும் வகை­யில் முத­லீடு செய்­ப­வர்­க­ளுக்கு மாத வட்­டி­யாக 10 முதல் 25 விழுக்­காடு வரை தரப்­படும் என ஆசை காட்டி மோசம் செய்­துள்­ள­னர்.

பொது­மக்­க­ளின் முத­லீ­டு­க­ளைப் பெறு­வ­தற்­காக ஆங்­காங்கே முக­வர்­கள், பணி­யா­ளர்­களை நிய­மித்து ஆடம்­பர நட்­சத்­திர விடு­தி­களில் கூட்­டங்­களை நடத்தி, பணத்­தைப் பெற்­றுள்­ள­னர்.

ஆனால், அவர்­கள் சொன்­ன­படி முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு மாதந்­தோ­றும் வட்­டித்­தொகை, முத­லீட்­டுத் தொகையைத் திருப்­பித் தர­வில்லை என்று புகார்­கள் வந்­ததை அடுத்து ஆருத்ரா கோல்டு நிதி நிறு­வ­னம் மீது காவல்­து­றை­யி­னர் வழக்­குப் பதிந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ரூ.9,038 கோடி மோசடி

அவற்­றுள் ஆருத்ரா கோல்டு நிதி நிறு­வ­னம், ஹிஜாவு அசோ­சி­யேட்ஸ் பிரை­வேட் லிமி­டெட், எல்.என்.எஸ். அனைத்­து­லக நிதிச் சேவை நிறு­வ­னம் உள்­ளிட்ட நிறு­வ­னங்­கள் முக்­கி­ய­மா­னவை.

ஆருத்ரா நிறு­வ­னத்­தில் ஒரு லட்­சத்து 9,255 பேர் ரூ.2,438 கோடி அள­வுக்கு முத­லீடு செய்­துள்ள தாக­வும் கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து ஆருத்ரா நிறு வனம் தொடர்­பாக எட்­டுப் பேர் மீது குற்­றம்­சாட்­டப்­பட்ட நிலை­யில், பாஸ்­கர், மோகன் பாபு உள்­ளிட்ட மூவர் கைது செய்­யப்­பட்­ட­னர். மற்ற ஐவர் தலை­ம­றை­வாக உள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

ஹிஜாவு நிறு­வ­னம் 600 கோடி ரூபாய் அள­வுக்கு முத­லீடு பெற்­றுள்ள நிலை­யில், சவுந்­த­ரரா­ஜன் என்­ப­வ­ரையும் அவ­ரது மகன் அலெக்­சாண்­டர் என்­ப­வ­ரை­யும் கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

இதே­போல் எல்.என்.எஸ். சர்­வ­தேச நிதி சேவை நிறு­வ­னத்­தில் ஒரு லட்­சம் பேர் ரூ.6,000 கோடிக்கு முத­லீடு செய்­துள்­ளது தெரி­ய­வந்­தி­ருக்­கிறது.

இவ்வழக்­கில் குற்­றம் சுமத்­தப் ­பட்ட மூவர் கைது செய்­யப்­பட்டு உள்­ள­னர். தலை­ம­றை­வாக உள்ள வர்­களைக் கைதுசெய்யவும் நட­ வ­டிக்கை எடுத்து வருகின்றனர்.