கோடிக்கணக்கிலான தங்க, வைர நகைகள் கொள்ளை மூன்று சிறுவர்களிடம் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

கோடிக்கணக்கிலான தங்க, வைர நகைகள் கொள்ளை மூன்று சிறுவர்களிடம் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

2 mins read
0431846d-e97f-4f2a-91b5-ecdda7fb613c
-

சென்னை: தாம்­ப­ரம் அருகே உள்ள ஒரு நகைக்­க­டைக்­குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கு பொது­மக்­க­ளின் பார்வைக்­காக காட்­சிப்­படுத்­தப்பட்­டி­ருந்த பல கோடி மதிப்­பி­லான தங்க, வைர நகை­களை சுருட்டிக்கொண்டு தப்பினர்.

நேற்று அதி­காலை இந்திய நேரப்படி 5 மணி அளவில் இந்தச் சம்பவம் நடந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் சிறுவர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ரூ.1.50 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிறுவர்கள் மூவரும் கூட்டாகச் சேர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது காவலர்களின் விசார ணையில் தெரியவந்தது.

அவர்கள் கொள்ளையடிக்கப்பட்ட நகைக்கடைக்கு எதிரிலேயே தங்கி இருப்பதாகவும் தெரிவித்தனர்.

செங்­கல்­பட்டு மாவட்­டம், சேலை­யூர்-வேளச்­சேரி சாலை­யில் 'ப்ளூ ஸ்டோன்' என்ற நகைக்­கடை செயல்­பட்டு வரு­கிறது.

மூன்று மாதங்­க­ளுக்கு முன்­பு­ திறக்­கப்­பட்­ட­ இந்த நகைக் கடைக்குச் செல்லும் தண்ணீர் குழாய் வழியாக ஏறி நகைக்கடை மாடிக்கு சென்று, அங்கிருந்து மின்தூக்கி இணைப்பு அறை வழி யாக நகைக் கடைக்குள் சென்று கைவரிசை காட்டியதும் கண்டு பிடிக்கப்பட்டது.

பாது­காப்புப் பெட்­ட­கத்தை அவர்­கள் திறக்க முயற்சி செய்­த­போது எச்­ச­ரிக்கை அலா­ரம் ஒலித்­த­தால் கொள்­ளை­யர்­கள் அங்­கி­ருந்து தப்­பித்­துள்­ள­னர்.

திருடர்கள் உள்ளே நுழைந்த தக­வல் நகைக்­க­டை­யின் உரிமை யாள­ர் ஜெகதீசனுக்கு அவரது கைப் பேசி மூலம் தெரியவந்­துள்­ளது.

இத­னி­டையே, நகைக்­கடை கொள்­ளைச் சம்­ப­வத்­தின் சிசி­டிவி காட்சிகளும் வெளி­யாகி உள்­ளன.

இந்­நி­லை­யில், கொள்­ளைச் சம்­ப­வத்­தில் ஈடு­பட்ட வட­மா­நில இளை­யரை அவ­ரது டி-சட்டையை அடை­யா­ள­மாக வைத்து காவலர்கள் பிடித்தனர். அவர் கூறிய தகவலின் படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடு பட்ட அசாமைச் சேர்ந்த இரண்டு சிறார்களைச் சேலை­யூர் காவ­லர்­கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.