ஸ்டாலின்: கரூர், காஞ்சிபுரம், திருப்பூரில் விரைவில் ஜவுளி ஏற்றுமதி மையம் அமையும் தமிழகத்தில் உலகத் தரத்தில் ஜவுளி நகரம், ஜவுளிப் பூங்கா

ஸ்டாலின்: கரூர், காஞ்சிபுரம், திருப்பூரில் விரைவில் ஜவுளி ஏற்றுமதி மையம் அமையும் தமிழகத்தில் உலகத் தரத்தில் ஜவுளி நகரம், ஜவுளிப் பூங்கா

2 mins read
f8cbe3a3-a756-47a2-8104-199833f6ada3
தமி­ழ­கத்­தில் விவ­சா­யத்­திற்கு அடுத்த­ப­டி­யாக 60 லட்­சத்­துக்­கும் அதி­கமான மக்களுக்கு ­ வேலை வாய்ப்­பு­களை ஜவு­ளித் தொழில் வழங்குவதாக ­அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு தெரி­வித்­தார். படம்: ஊடகம் -

சென்னை: சென்­னை­யில் உல­கத் தரத்­தி­லான மாபெ­ரும் ஜவுளி நக­ரத்தை அமைப்­ப­தற்­கான நடவடிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

மாநி­லத்­தின் ஜவுளி ஏற்­று­மதியை பன்­ம­டங்கு அதி­க­ரிக்கும் வகையில் கரூர், காஞ்சி­பு­ரம், திருப்­பூர் போன்ற நக­ரங்­களில் ஜவுளி ஏற்­று­மதி மையங்­கள் விரைவில் அமைக்கப்பட உள்ளதாகவும் அதற் கான பணிகள் துரிதமாக நடந்து வரு­வ­தா­க­வும் அவர் மேலும் கூறி­னார்.

அத்துடன், மாமல்­ல­பு­ரத்­தில் ரூ.30 கோடி­யில் கைத்­தறி அருங்­காட்­சி­ய­கம் அமைக்­க­வும் திட்­ட­மிடப்­பட்­டுள்­ளது.

மத்­திய அர­சின் ஜவு­ளித் துறை, தமி­ழக அர­சின் துணி நூல் துறை, இந்­தி­யத் தொழில் கூட்­ட­மைப்பு ஆகி­யவற்றின் ஏற்பாட்டில் தொழில்­நுட்ப ஜவுளி தொடர்­பான அனைத்­து­லக இரண்டு நாள் மாநாடு சென்னை, மணப்­பாக்­கத்­தில் நடை­பெற்­றது.

அப்­போது பேசிய முதல்வர் ஸ்டா­லின், "ஜவு­ளித் துறை­யில் வெளி­நாட்டு முத­லீ­டு­கள், ஏற்­று­மதி­களை ஈர்ப்­ப­தில் இந்தியாவில் தமிழ்­நாடு மூன்­றா­வது இடத்­தில் உள்­ளது," எனக் குறிப்­பிட்­டார்.

இந்­தி­யா­வின் மொத்த ஜவுளி ஏற்­று­மதி வரு­வா­யில் தமி­ழ­கம் மட் டும் 12% பங்­க­ளிப்பை அளித்து வருவதாகவும் சொன்­ன ஸ்டாலின், "விரு­து­ந­கர் மாவட்­டத்­தில் மிகப் பெரிய ஜவு­ளிப் பூங்கா அமைப்பதற்கு ஏதுவாக 1,500 ஏக்­கர் நிலம் கைய­கப்படுத்­தப்­பட்டு உள்­ள­து," எனத் தெரிவித்தார்.

மாநாட்டில் உள்­நாடு, அமெ ரிக்கா, ஐரோப்­பிய நாடு­க­ளின் தொழில் நிறு­வ­னங்­க­ளு­டன் ஆறு புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­களும் கையெ­ழுத்­தா­கின.

ஜவு­ளித் துறையை மேம்­ப­டுத்­தும் வகை­யில், புதிய ஒருங்­கிணைந்த ஜவு­ளிக் கொள்­கையை உரு­வாக்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­க­வும் அனைத் துலக நிறுவனங்­கள் தமி­ழ­கத்­தில் தொழில் தொடங்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்டு இருப்­ப­தா­க­வும் அவர் கூறி­னார்.

எனவே, தமிழகத்தின் பல்வேறு வச­தி­, வாய்ப்புகளையும் பயன்­ப­டுத்­திக்கொண்டு வெளிமாநில, வெளி நாட்டு தொழில் முனை­வோர் அனை ­வ­ரும் தமிழகத்­தில் முத­லீடு செய்து ஜவு­ளித் தொழில் வளா்ச்­சிக்கு உதவவேண்­டும் என்றும் ஸ்டா­லின் கேட்­டுக்கொண்­டார்.

தலைநகர் சென்னையின் புற­நகர்ப் பகு­தி­யில் 100 ஏக்­க­ருக்கு மேல் இந்த ஜவுளி நக­ரம் அமைக்­கப்­பட உள்­ள­தாக மாநில ஜவு­ளித் துறை­யின் அதி­கா­ர­பூர்வ தக­வல் வட்­டா­ரம் தெரி­வித்­துள்­ளது.

இத­னி­டையே, தமி­ழ­கத்­தில் விவ­சா­யத்­திற்கு அடுத்­த­ப­டி­யாக அதிக வேலை வாய்ப்­பு­களை வழங்­கு­வது இந்த ஜவு­ளித் தொழில்­தான் என்று தொழில்­துறை அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு தெரி­வித்­தார். இத்துறை 60 லட்­சத்­துக்­கும் அதி­க­மா­னோ­ருக்கு வேலை­வாய்ப்பை வழங்­கு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.