தமிழகத்துக்கு வெளியே பயணம் செய்ய ராஜேந்திர பாலாஜிக்கு அனுமதி மறுப்பு

தமிழகத்துக்கு வெளியே பயணம் செய்ய ராஜேந்திர பாலாஜிக்கு அனுமதி மறுப்பு

2 mins read
e6949f76-ce5b-4f2f-8523-7ca472735b68
-

புது­டெல்லி: தமிழ்­நாட்டை விட்டு வெளிமாநிலங்களுக்கு பய­ணம் மேற்கொள்ள அனு­ம­திக்கவேண்­டும் என அதி­முக முன்­னாள் அமைச்­சர் கே.டி. ராஜேந்­திர பாலாஜி விடுத்த கோரிக்­கையை டெல்லியில் உள்ள உச்ச நீதி­மன்­றம் நிரா­கரித்து விட்டது.

ஆவின் நிறு­வ­னத்­தில் வேலை வாங்­கித் தரு­வ­தா­கக் கூறி மூன்று கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த வழக்­கில், ராஜேந்­திர பாலாஜி கடந்த ஜன­வரி மாதம் கைது செய்­யப்­பட்­டார்.

அவ­ருக்கு உச்ச நீதி­மன்­றம் நிபந்­தணை பிணை வழங்­கி­யது.

வழக்­குப் பதிவு செய்­யப்­பட்­டுள்ள விரு­து­ந­கர் காவல் எல்­லைக்­குள் ளேயே தங்­கி­யி­ருக்­கும்படியும் நீதி மன்றம் அவரை அறி­வு­றுத்­தி­யது.

அதன்பின்­னர் நிபந்­த­னையைத் தளர்த்­திய நீதி­மன்­றம், தமி­ழ­கத்துக் குள் எங்கு வேண்டுமானாலும் சென்று வர­லாம் என அனு­மதி வழங்­கி­யது.

இதைத்­தொ­டர்ந்து, நாடு முழு வதும் பய­ணம் செய்ய அனு­ம­திக்­கக் கோரி கடந்த 1ஆம் தேதி ராஜேந்­திர பாலாஜி மனுத் தாக்­கல் செய்­திருந்தார்.

இது­தொ­டர்­பாக நேற்று முன் தினம் நடை­பெற்ற விசா­ர­ணை­யில், "ராஜேந்­திர பாலா­ஜிக்கு எதி­ரான அனைத்து விசா­ர­ணை­களும் முடி­வடைந்து விட்­டன. அவர் மீதான மோசடி வழக்­கில் குற்­றப் பத்­தி­ரி­கை­யைத் தாக்­கல் செய்வதற்குத் தயா­ராக உள்­ளோம்," என தமி­ழக அரசு தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

அத்­து­டன், இன்னும் 45 நாள்­களில் ராஜேந்­திர பாலாஜி மீதான வழக்­கில் குற்­றப்பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­படும் என­வும் உச்­ச ­நீ­தி­மன்­றத்­தில் அரசு தெரி­வித்தது.

இதைத்தொடர்ந்து, தமிழ்­நாட்டை விட்டு வெளியே செல்ல அனு­மதிக்க வேண்­டும் என ராஜேந்­திர பாலாஜி தரப்பு கோரி­யதை உச்ச நீதி­மன்­றம் ஏற்­க­வில்லை.

அவருக்கு விதிக்­கப்­பட்ட நிபந்­தனை பிணையை மேலும் தளர்த்த முடி­யாது எனவும் உச்­ச­நீ­தி­மன்­றம் கூறி­விட்­டது. இத­னால் அவர் தமி­ழ­கத்தை விட்டு வெளியே செல்­ல­மு­டி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இப்­போ­தைய சூழலில் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்யப்­பட இருப்­ப­தால் ராஜேந்­திர பாலா­ஜிக்கு மீண்­டும் நெருக்­கடி அதி­க­ரித்­துள்­ளதாகக் கூறப்படுகிறது.