இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து பறிமுதல்

இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து பறிமுதல்

1 mins read
120ed9bb-e715-4701-950e-ada6352e70cd
-

தேனி: தேனி மாவட்­டம், உத்­தம பாளை­யத்­தைச் சேர்ந்­த­வர் சசி­குமார். கூலித் தொழி­லாளி. 2019ல் தேனி புதுப் பேருந்து நிலை­யம் அருகே இரு­சக்­கர வாக­னத்­தில் சென்­ற­போது அர­சுப் பேருந்து மோதி­யது. காய­ம­டைந்த அவர் சிகிச்­சைக்­குப் பின்­னர் குண­ம­டைந்­தார். இந்த வழக்கு தேனி நீதி­மன்­றத்­தில் நடந்து வந்­தது.

சசி­கு­மா­ருக்கு 9 லட்­சத்து 30 ஆயி­ரம் ரூபாய் வழங்க போக்கு வரத்­துத் துறைக்கு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது. இழப்­பீடு கிடைக்­கா­த­தால் மீண்­டும் நீதி­மன்­றத்தை நாடி­னார் சசி­கு­மார்.

நீதி­பதி வெங்­க­டே­சன் விசா ரித்­தார். சசி­கு­மா­ருக்கு 11 லட்­சத்து 68,000 ரூபாயை இழப்­பீ­டாக வழங்கும்படி உத்­த­ர­விட்­டார்.

போக்­கு­வ­ரத்துத் துறை­யி­னர் இழப்­பீடு தரா­த­தால் விபத்து ஏற்­படுத்­திய பேருந்து தேனி­யில் கையகப்படுத்தப்பட்டது.