191 இடங்களில் 382 படச்சாதனங்கள் பொருத்தி புலிகள் தீவிர கணக்கெடுப்பு

191 இடங்களில் 382 படச்சாதனங்கள் பொருத்தி புலிகள் தீவிர கணக்கெடுப்பு

1 mins read
80f0ae44-a005-4523-b084-7a3de6ff2d94
-

கூட­லுார்: கூட­லுார் முது­ம­லை­யில், 191 இடங்­களில் மொத்­தம் 382 தானி­யங்கி படச் சாத­ன­ங்க­ளைப் பொருத்தி புலி­கள்

உள்ளிட்ட வன­வி­லங்­கு­கள் கணக்­கெடுப்புப் பணியை வனத்­து­றை­யி­னர் தொடங்கியுள்­ள­னர். படம்: தமிழக ஊடகம்)

நீல­கிரி மாவட்­ட­டம், தெப்­பக்­காடு, முது­மலை, கார்­குடி, நெலாக்­கோட்டை, மசினக்­குடி வனப்பகு­தி­களில் தானி­யங்கி படச்­சா­த­னங்­கள் பொருத்­தப்­பட்டு வரு­கின்­றன.

இதற்­காக 191 இடங்­களில் தலா இரு தானி­யங்கி சாத­னங்­கள் பொருத்­தும் பணி­யில் வன ஊழி­யர்­கள் ஈடு­பட்டு உள்­ள­னர். அந்­தச் சாத­னங்­களில் பதி­வா­கும் படங்­கள், காணொ­ளி­க­ளைப் பதி­வி­றக்­கம் செய்து, ஆய்வு செய்­யப்­படும்.

இப்­பணி, 40 நாள்கள் நடக்­கிறது. இரண்­டாம் கட்­டமாக முது­மலை வெளி­வட்­டப் பகு­தி­யில் கணக்­கெடுப்புப் பணி நடக்க உள்­ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.