மதுரை: வடகிழக்குப் பருவமழையைத் தொடர்ந்து தமிழகத்தில் காய்கறிகள் விளைச்சல் அதிகரித்துள்ளது. சந்தைகளுக்கு வரத்து அதிகரிப்பதால் காய்கறிகள் விலை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்ற தக்காளி இப்போது ரூ.10க்கு விற்பனையாகிறது.
மதுரை ஒருங்கிணைந்த காய்கறி சந்தையில் 200 டன் காய்கறிகள் வரத்து உள்ளது. பறவையில் சந்தைக்கு 1,000 டன் காய்கறிகள் வருகின்றன. விலை மலிவால் மக்கள், வியாபாரிகள் அதிகளவு காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

