காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோடிக்கணக்கான மதிப்பீட்டில் உள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓராண்டில் 195 ஏக்கர் கோவில் நிலம் மீட்கப்பட்டுள்ளது என்று காஞ்சிபுரம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 17 கோவில்களுக்குச் சொந்தமான ரூ.1,589 கோடி மதிப்புள்ள 195 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.

