இணைய சூதாட்டம்: நிரந்தரத் தடை விதிக்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை

இணைய சூதாட்டம்: நிரந்தரத் தடை விதிக்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை

2 mins read
99db61d8-cc89-49a2-bf26-1e5b69f3e1b7
-

விரு­து­ந­கர்: இணை­யம் வழி (ஆன்­லைன்) நடை­பெ­றும் சூதாட்­டத்­துக்கு தடை விதிக்க நிரந்­தர சட்­டம் கொண்­டு­வர தமி­ழக அரசு முடிவு செய்­துள்­ளது.

இது தொடர்­பாக சட்­டப்­பே­ர­வை­யில் மசோதா நிறை­வேற்­றப்­பட்டு ஆளு­ந­ரின் ஒப்­பு­த­லுக்­காக கடந்த மாதம் அனுப்பி வைக்­கப்­பட்­டது. ஆனால் இன்று வரை ஆளு­நர் இந்த மசோ­தா­வுக்கு ஒப்­பு­தல் வழங்­க­வில்லை.

மாறாக, அந்த மசோதா குறித்து பல்­வேறு கேள்­வி­களை எழுப்பி, விளக்­கங்­கள் கேட்­டுள்­ளார்.

இது குறித்து மாநில அர­சுக்கு அவர் அனுப்­பிய கடி­தத்தை பெற்­றுக்­கொண்ட 24 மணி நேரத்­துக்­குள் தமி­ழக அரசு உரிய பதில் அடங்­கிய கடி­தத்தை அனுப்பி வைத்­தது. எனி­னும், ஆளு­நர் இன்­னும் ஒப்­பு­தல் அளிக்­க­வில்லை.

பொது­வாக, அவ­சர சட்­டம் சட்­டப்­பே­ர­வை­யில் தாக்­கல் செய்­யப்­பட்ட ஆறு வாரங்­க­ளுக்­குள் தானாக காலா­வ­தி­யா­கி­வி­டும். அந்த வகை­யில் இணைய வழி சூதாட்­டத்­துக்கு தடை விதித்து கொண்டு வரப்­பட்ட அவ­ச­ரச் சட்­ட­மும் காலா­வ­தி­யா­கி­விட்­டது.

இந்­நி­லை­யில், நிரந்­தர தடை விதிக்­கும் சட்ட மசோ­தா­வுக்கு தமி­ழக ஆளு­நர் எப்­போது ஒப்­பு­தல் அளிப்­பார் என்ற கேள்வி எழுந்­துள்­ளது. இது குறித்து முன்பு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய தமி­ழக சட்ட அமைச்­சர் எஸ்.ரகு­பதி, ஆளு­நர் நிரந்­தர சட்ட மசோ­தா­வுக்கு ஏன் ஒப்­பு­தல் அளிக்க தயங்­கு­கி­றார் என்­பது தெரி­ய­வில்லை எனக் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

"இது­கு­றித்து நேரில் விளக்­கம் அளிக்க ஆளு­ந­ரைச் சந்­திக்க அனு­மதி கேட்­டோம். ஆனால் நேரம் ஒதுக்­கித்­த­ரப்­பட வில்லை," என்­றும் அமைச்­சர் ரகு­பதி கூறி­யுள்­ளார்.

இணைய வழி சூதாட்­டத்­துக்கு நிரந்­தர தடை விதிக்­கும் சட்ட மசோ­தா­வுக்கு ஆளு­நர் உட­ன­டி­யாக ஒப்­பு­தல் வழங்க வேண்­டும் என அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

"ஒரு மாநி­லத்­தின் முதல்­வ­ரும் ஆளு­ந­ரும் ஒரு­மித்த கருத்­து­டன் செயல்­பட வேண்­டும். மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சுக்கு ஆளு­நர் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டும். இணைய வழி சூதாட்­டத்தை தடை செய்­யா­விட்­டால் தமி­ழ­கம் வேட்­டைக்­கா­டாக மாறி­வி­டும்," என்­றும் அன்­பு­மணி ராம­தாஸ் கூறி­யுள்­ளார்.