4,000 கிலோ கோவில் தங்கம் வங்கியில் செலுத்தப்படும்

4,000 கிலோ கோவில் தங்கம் வங்கியில் செலுத்தப்படும்

1 mins read
2ba3dbcd-86b1-4b2d-a019-c7b8197620a9
-

சென்னை: தமி­ழ­கத்­தில் உள்ள பல்­வேறு கோவில்­க­ளுக்­குச் சொந்­த­மான தங்­கத்தை உருக்கி, சுமார் நான்­கா­யி­ரம் கிலோ தங்­கம் வங்கி­களில் வைப்பு நிதி­யாக வைக்­கப்­பட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அற­நி­லை­யத் துறை அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு தெரி­வித்­துள்­ளார்.

இதன் மூலம் கிடைக்­கும் வரு­வாய், கோவில்­க­ளின் மேம்­பாட்­டுக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

மேலும், எதிர்­வ­ரும் தைப்­பூச விழா­வை­யொட்டி பழனி முரு­கன் கோவி­லுக்கு நடைப்­ப­ய­ண­மாக வரும் பக்­தர்­க­ளுக்கு அன்­ன­தா­னம் வழங்­கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது என்­றும் நாள்­தோ­றும் பத்­தா­யி­ரம் பேர் வீதம், 20 நாள்­க­ளுக்கு அன்­ன­தா­னம் வழங்­கப்­படும் என்­றும் அமைச்­சர் கூறி­யுள்­ளார்.

ஏற்­கெ­னவே மாநி­லம் முழு­வ­தும் உள்ள பல்­வேறு கோவில்­க­ளின் தங்­கம் உருக்­கப்­பட்டு வங்­கி­களில் வைப்பு நிதி­யாக செலுத்­தப்­பட்­டுள்­ளது என்­றும் அமைச்­சர் சேகர்­பாபு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசுகையில் தெரி­வித்­தார்.