இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.360 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.360 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல்

1 mins read
35678226-eac7-4d05-be11-610a3e6e7c43
-

ராமே­சு­வ­ரம்: இலங்­கைக்கு கடத்த முயன்ற 360 கோடி ரூபாய் மதிப்பி­லான போதைப்பொருளை கடற்­படை­யைச் சேர்ந்த காவல் பிரிவு பறி­மு­தல் செய்­தது. இது தொடர்­பாக கீழக்­கரை நக­ராட்­சி­யைச் சேர்ந்த திமுக கவுன்­சி­ல­ரும் முன்­னாள் கவுன்­சி­லர் ஒரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

நேற்று முன்­தி­னம் ராமே­சு­வ­ரம் மண்­ட­பம் பகுதி அருகே கடற்­படை­காவல்துறையினர் தீவிர கண்­காணிப்பு வாக­னச் சோத­னை­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அப்­போது அவ்­வழியே வேக­மா­கச் சென்ற சொகுசு கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை­யிட்­ட­னர்.

அப்­போது, அந்­தக் காரில் சில தண்­ணீர் கேன்­கள் காணப்­பட்­டன. இத­னால் சந்­தே­க­ம­டைந்த அதி­கா­ரி­கள் அவற்றை ஆய்வு செய்­த­போது கோகைன் போதைப்பொரு­ளுக்கான மூலப்­பொ­ருள்­கள் இருப்­பது தெரி­ய­வந்­தது. மொத்­தம் 360 கிலோ எடை­உள்ள அந்த மூலப் பொருள்­களின் அனைத்­து­லக சந்தை மதிப்பு ரூ.360 கோடி என்று குறிப்­பிட்ட அதி­கா­ரி­கள், காரில் அவற்றைக் கொண்டு சென்ற கீழக்­கரை நக­ராட்­சி­யின் முன்­னாள் கவுன்­சி­லர் ஜெயி­னுதீன் (45 வயது) என்­ப­வ­ரை­யும் 19ஆவது வார்டு கவுன்­சி­ல­ரான 42 வயது சர்ப்­ராஸ் நவாஸ் என்­ப­வரை­யும் கைது செய்­த­னர். மேலும், போதைப்­பொ­ருள்­களை படகு மூலம் இலங்கைக்கு கொண்டு செல்ல இருந்த 36 வயது ஆட­வ­ரும் பிடி­பட்­டார். பல கோடி ரூபாய் மதிப்­புள்ள போதைப்பொருளை, மீன­வர்­கள் என்ற போர்­வை­யில் நாட்­டுப்­ப­ட­கில் இலங்­கைக்கு கடத்த மூவ­ரும் திட்­ட­மிட்­டி­ருந்­தது தெரி­ய­வந்­தது.