துரைமுருகன்: அரசியல் செய்கிறார் தமிழக ஆளுநர்

துரைமுருகன்: அரசியல் செய்கிறார் தமிழக ஆளுநர்

1 mins read
dd8049ed-2f4c-4ac8-b5b8-c18341da33ca
-

வேலூர்: தமி­ழக ஆளு­நர் முழுக்க முழுக்க அர­சி­யல் செய்­வ­தாக அமைச்­சர் துரை­மு­ரு­கன் குற்­றம்­சாட்டி உள்­ளார்.

வேலூ­ரில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், தமி­ழ­கத்­தில் இணைய வழி சூதாட்­டத்­துக்கு தடை­வி­திக்­கும் மாநில அர­சின் நட­வ­டிக்­கைக்கு ஆளு­நர் ஒத்­து­ழைக்­க­வில்லை என்­றார்.

"சூதாட்­டத்­துக்கு தடை­வி­திக்க அவ­சர சட்­டம் கொண்டு வரப்­பட்­டது. இதை­ய­டுத்து நிரந்­த­ர­மாக தடை செய்­வ­தற்­கான சட்ட மசோ­தாவை ஆளு­நர் பார்­வைக்கு அனுப்பி வைத்­தோம். இது­வரை அவர் பதில் அ ளிக்­க­வில்லை.

"இதற்­கி­டையே அவ­சர சட்­டம் காலா­வ­தி­யா­கி­விட்­டது. இனி­யா­வது நிரந்­தர தடை மசோ­தா­வுக்கு ஆளு­நர் ஒப்­பு­தல் அளிப்­பார் என எதிர்­பார்க்­கி­றோம்.

"இல்­லை­யெ­னில் எங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்ன, அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்­பதை தெரி­விப்­போம்," என்­றார் அமைச்­சர் துரை­மு­ரு­கன்.

இதற்­கி­டையே கோவை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய தெலுங்­கானா ஆளு­நர் தமி­ழிசை சௌந்­த­ர­ரா­ஜன், அர­சுக்கு துணை­யாக இருக்­கவே ஆளு­நர்­கள் ஆசைப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

ஆனால் ஒரு தரப்­பி­னர் ஆளு­நர்­க­ளின் செயல்­பாடு­களை தவ­றாக புரிந்து கொள்­கின்­ற­னர் என்­றார் அவர்.

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

இணைய வழி சூதாட்டத்துக்கு நிரந்தரத் தடை விதிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

இதனால் தமிழக அரசு வருத்தமடைந்துள்ளதாக மூத்த அமைச்சர்கள் கூறியுள்ளனர்.