தீவிர அகழ்வாராய்ச்சி: முதல்வர் உத்தரவு

தீவிர அகழ்வாராய்ச்சி: முதல்வர் உத்தரவு

2 mins read
756fd2e3-0eb7-4443-8c36-470c422bd7f4
ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின். படம்: ஊடகம் -

கங்கை கொண்ட சோழபுரத்தில் இரவு நேரத்திலும் ஆய்வு

அரி­ய­லூர்: கங்­கை­கொண்ட சோழ­பு­ரத்­தில் அருங்­காட்­சி­ய­கம் அமைக்­கப்­படும் என்­றும் அரி­ய­லூர், பெரம்­ப­லூர் மாவட்­டங்­களில் புதை படிம பூங்கா அமைக்­கப்­படும் என்­றும் முதல்­வர் மு.க. ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் அரி­யலூர் மாவட்­டம் கொல்­லா­பு­ரத்­தில் செய்தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், அரி­ய­லூர், பெரம்­ப­லூ­ரில் வர­லாற் றுச் சிறப்புமிக்க அம்­சங்­கள் ஏராள­மாக உள்­ளன என்­றும் தமிழக அரசு தொல்­லி­யல் ­து­றை­யில் ஒரு மறு­ம­லர்ச்­சியை ஏற்­ப­டுத்தி உள்­ளது என்றும் குறிப்பிட்டார்.

கங்­கை­கொண்ட சோழ­பு­ரம் அருகே அகழ்­வா­ராய்ச்சி நடை­பெற்ற இடங்­களை முதல்­வர் மு.க.ஸ்டா­லின் பார்­வை­யிட்டு ஆய்வு செய்­தார். அப்­போது, சம்பந்தப்­பட்ட அதி­கா­ரி­க­ளி­டம் அவர் பல்­வேறு விவ­ரங்­க­ளைக் கேட்­ட­றிந்­தார்.

அரி­ய­லூர் மாவட்­டம், கங்கை கொண்ட சோழ­பு­ரம் அருகே உள்ள மாளி­கை­மேடு பகு­தி­யில் தமி­ழக அரசு தொல்­லி­யல் துறையின் சார்பில் இரு கட்­டங்­க­ளாக விரிவான அகழ்­வா­ராய்ச்சி பணி நடந்து முடிந்­துள்­ளது.

மாளி­கை­மேட்­டில் அக­ழாய்வுப் பணி­கள் நடை­பெற்ற பகு­தியை நேற்று முன்தினம் ஆய்வு செய்த முதல்­வர், அக­ழாய்­வில் கண்­ட­றி­யப்­பட்ட பழ­மை­யான பொருள்­க­ளை­யும் பார்­வை­யிட்­டார்.

மாளி­கை­மேட்­டில் அரண்­மனை இருந்­ததை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் பல்­வேறு பொருள்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

அதன் தொடர்ச்­சி­யாக இருபத்து இரண்டு அடுக்கு கொண்ட செங்­கல் சுவ­ரும் அகழ்­வா­ராய்ச்­சி­யின்­போது கிடைத்­துள்­ளது. அவற்றை எல்­லாம் பார்­வை­யிட்­டார் தமி­ழக முதல்­வர்.

பழங்­கால தங்­கக்­காப்பு, மண்­பானை, மண்­ணா­லான கெண்டி செம்­பின் மூக்­குப்­ப­குதி உள்­ளிட்ட மேலும் பல பொருள்­களை முதல்­வர் பார்­வை­யிட ஏது­வாக தொல்­லி­யல்­துறை அதி­கா­ரி­கள் வரி­சை­யாக வைத்­தி­ருந்­த­னர்.

மேலும் சோழர்­க­ளின் கலையை பின்­பற்­றிய யானை தந்­தத்­தா­லான மனித உரு­வம், சீன மண் பாண்­டங்­கள், செப்பு நாண­யங்­கள், செம்புப் பொருட்­கள், இரும்பு ஆணி­கள், கண்­ணாடி மணி­கள், வளை­யல்­கள், அலங்­க­ரிக்­கப்­பட்ட கற்­கள் ஆகி­ய­ அரிய பொருள்கள் பலவும் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.