38 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 1,835 ஊழல் வழக்குகள்

38 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 1,835 ஊழல் வழக்குகள்

1 mins read
dd33b8ce-13af-4862-a71c-d2811590d2c0
-

சென்னை: ஊழல் வழக்­கு­களை நீண்ட காலத்­துக்கு நீதி­மன்­றங்­களில் நிலு­வை­யில் வைத்­தி­ருந்­தால், ஊழலை ஒரு­போ­தும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது என உயர் நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் கடந்த 38 ஆண்­டு­க­ளாக 1,635 ஊழல் வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ள­தா­க­வும் அவை அனைத்தையும் விரைந்து விசா­ரிக்க வேண்­டும் என்­றும் உயர் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் சுட்­டிக்­காட்டி உள்­ள­னர்.

போக்­கு­வ­ரத்து துறை­யில் நடை­பெற்­ற­தா­கக் கூறப்­படும் ஊழல் தொடர்­பான வழக்கு ஒன்றை உயர் நீதி­மன்­றம் விசா­ரித்து வரு­கிறது. நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற விசா­ர­ணை­யின்­போதே நீதி­ப­தி­கள் இவ்­வாறு குறிப்­பிட்­ட­னர்.

தமி­ழ­கம் முழு­வ­தும் கடந்த 1983 முதல் 2021ஆம் ஆண்டு வரை 1,635 ஊழல் வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ள­தாக மாநில லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை தாக்­கல் செய்­துள்­ளது என்று குறிப்­பிட்ட நீதி­ப­தி­கள், இத்­த­கைய தாம­த­மா­னது ஊழல் வழக்­கின் தன்­மையை நீர்த்­துப்­போ­கச் செய்து­வி­டும் என்­ற­னர்.

மேலும், ஊழல் குற்­றச்­சாட்டுக்கு உள்­ளா­ன­வர்­கள் சட்­டத்­தின் பிடி­யில் இருந்­து­தப்­பிக்க வழி வகுக்­கும் என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

ஊழல் வழக்­கு­களை விரைந்து விசா­ரிக்­கா­விட்­டால் ஊழல் தடுப்பு சட்­டத்­தின் நோக்­கத்­தையே வீழ்த்­தி­வி­டும். எனவே அனைத்து ஊழல் வழக்­கு­க­ளை­யும் விரை­வாக முடிக்க வேண்­டும்," என்­றும் உயர் நீதி­மன்­றம் மேலும் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.