தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சரியாகக் கற்பிக்க கோரிக்கை

1 mins read
74852a49-2568-4f26-8c2d-173122bf73a0
-

சென்னை: சென்­னை­யில் 13ஆவது உல­கத் தமி­ழா­சி­ரியா் மாநா­டு­ ந­டை­பெற்று வரு­கிறது. 'மரபு, பண்­பாடு, கலை­கள் வழி கற்­றல்-கற்­பித்­தல்' என்ற கருப்­பொ­ரு­ளில் வெள்­ளிக்­கி­ழமை தொடங்­கிய மாநாடு இன்­று­டன் நிறை­வு­பெ­று­கிறது.

தமிழ்­நாடு தொடக்­கப் பள்ளி ஆசி­ரியா் கூட்­டணி, உல­கத் தமி­ழா­சி­ரியா் பேரவை ஆகிய அமைப்­பு­கள் ஒன்று சேர்ந்து நடத்­தும் இந்த மாநாட்­டின் சிறப்பு மலரை உயா்கல்­வித் துறை அமைச்சா் க. பொன்­முடி வெளி­யிட்­டுப் பேசி­னார்.

அப்­போது அவர் குறிப்­பி­டு­கை­யில், "ஆசி­ரி­யா்­கள் தங்­க­ளது மாண­வா்­க­ளின் தமிழ்­மொழி அறிவை மேம்­ப­டுத்த வேண்­டும்.

"தமி­ழக அரசு வெளி­யிட்ட அர­சா­ணை­யின்­படி, அரசு விழாக்­களில், கல்வி நிலை­யங்­களில், பொது நிறு­வ­னங்­களில், பொது நிகழ்ச்­சி­க­ளின்­போது நிகழ்வு தொடங்­கு­வ­தற்கு முன்­ன­தாக தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாடல் பாடப்­பட்டு வரு­கிறது.

"பள்­ளி­களில் அனைத்­துக் குழந்­தை­களும் தமிழ்த்­தாய் வாழ்த்­துப் பாடலை பிழை­யின்றிப் பாட தொடக்­கப் பள்ளி ஆசி­ரி­யா்­கள் சொல்­லித்­தர வேண்­டும்," என்று அவர் கேட்­டுக்­கொண்­டார்.