தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'ஒன்றோ, இரண்டோ நிறுத்திக்கொள்ளவும்'

2 mins read
9e93236b-f18c-4683-90e3-1386f0135ca9
மணமக்களை வாழ்த்தி திருமணம் செய்துவைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின். படம்: தமிழக ஊடகம் -

சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஊக்குவிக்கிறது. ஆனால் தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது

சென்னை: தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 217 ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் 31 ஜோடிகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தாலி எடுத்துக் கொடுத்து அட்சதை தூவி திருமணம் நடத்தி வைத்தார்.

அப்­போது பேசிய முதல்­வர், "ஒன்றோ இரண்டோ நிறுத்­திக் கொள்­ளுங்­கள். அள­வோடு பெற்று வளமோடு வாழுங்­கள்" என்று வாழ்த்தினார்.

"முன்பு திரு­ம­ணக் கட்­டுப்­பாடு இருந்­தது. நாம் இரு­வர், நமக்கு இரு­வர் என்று சொல்­லப்­பட்­டது. இது, நாம் இரு­வர் நமக்கு ஒரு­வர் என்­றா­கி­விட்­டது," என்­றார்.

சென்­னை­, திரு­வான்­மி­யூ­ரில் உள்ள மருந்­தீஸ்­வ­ரர் கோயி­லில் ஒரே நேரத்­தில் 31 மணப்­பெண்­ க­ளுக்கு மண­ம­கன்­கள் தாலி கட்­டினர். அவர்­க­ளுக்கு தாய் வீட்டு சீத­னம்­போல் மாங்­கல்­யத்­து­டன் சீர்­வ­ரி­சைப் பொருட்­க­ளாக பீரோ, மெத்தை, கட்­டில், தலை­ய­ணை­கள், குடும்­பம் நடத்த வீட்­டிற்குத் தேவை­யான பாத்­தி­ரங்­கள் உள்­ளிட்­டவை ரூ.72 ஆயி­ரம் மதிப்­பில் வழங்­கப்­பட்­டன.

இந்த நிகழ்ச்சியில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவையும் முதல்வர் பாராட்டினார்.

"சேகர் பாபு அல்ல செயல் பாபு," என்றார் அவர்.

"இந்து சமய அற­நி­லை­யத்­துறை சார்­பில் பல்­வேறு கல்­லூ­ரி­கள் தொடங்­கப்­பட்டுள்ளன. கொரோனா உச்­சத்­தில் இருந்­த­போது இத்­துறை சார்­பில் ஏழை­க­ளுக்கு உணவு அளிக்­கப்­பட்­டது. 47 கோயில்­களில் அன்னை தமி­ழில் அர்ச்­சனை செய்­யும் உரி­மம் மீட்­டெ­டுக்­கப்­பட்டு உள்­ளது. மேலும் பல கோயில்­களில் தமி­ழில் அர்ச்­சனை செய்யத் திட்­ட­மிட்­டுள்­ளோம். பெண் ஒரு­வர் அர்ச்­ச­க­ராக நிய­மிக்­கப்­பட்டு உள்­ளார்.

"பெரி­யா­ரின் சமத்­து­வத்தை நிலை­நி­றுத்­தும் வகை­யில் அனைத்து ஜாதி­யி­ன­ரும் அர்ச்­சகர்­ க­ளாக நிய­மிக்­கப்­பட்டு உள்­ள­னர். கோயில் சொத்­துக்­கள் ஆக்­கி­ர­மிப்­பில் இருந்து மீட்­கப்­பட்டு இருக்­கின்றன," என்று இந்து அற­நி­லை­யத் துறையின் சாத­னை­களைப் பட்­டி­ய­லிட்டுப் பேசினார்.

2022-2023ஆம் ஆண்­டிற்­கான இந்து சமய அற­நி­லை­யத் துறை­யின் மானி­யக் கோரிக்­கை­யில், "தமிழகத்தில் 20 மண்­ட­லங்­களில் ஆண்­டு­தோ­றும் 500 இணை­ களுக்கு திருக்­கோ­யில்களில் திரு­ம­ணங்­கள் நடத்­தப்­படும். இதற்­கான செல­வி­னத்­தைத் திருக்­கோ­யில்­களே ஏற்­கும் என அறி­விக்­கப்­பட்­டது. அதன்­படி, சென்னை இணை ஆணை­யர் மண்­ட­லத்­திற்­குட்­பட்ட திருக்­கோ­யில்­கள் சார்­பில் 31 இணை­க­ளுக்கு நேற்று தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டா­லின் தலை­மை­யேற்று திரு­ம­ணத்தை நடத்தி வைத்து சீர்­வ­ரி­சைப் பொருள்­களை வழங்கி, வாழ்த்­தி­னார்.