காவல்துறை: 1,800 பிச்சைக்காரர்கள் மீட்பு

காவல்துறை: 1,800 பிச்சைக்காரர்கள் மீட்பு

1 mins read

சென்னை: தமி­ழ­கத்­தில் ஆள்­கடத்­தல் குறித்து தக­வல் தெரிந்­தால் பொது­மக்­கள் உட­ன­டி­யாக காவல்­து­றைக்குத் தக­வல் தெரி­விக்க வேண்­டும் என காவல்­துறை தலை­வர் டிஜிபி சைலேந்­திர பாபு வலி­யு­றுத்தி உள்­ளார். தமி­ழ­கம் முழு­தும் நடத்­தப்­பட்ட, 'ஆப்­ப­ரே­ஷன் புது­வாழ்வு' நட­வ­டிக்­கை மூலம் 1,800 பிச்­சைக்­கா­ரர்­கள் மீட்­கப்­பட்­ட­தா­க­வும் அவர் தெரி­வித்­தார். மீட்­கப்­பட்­ட­வர்­களில் 255 பேர் அரசு காப்­ப­கங்­களிலும் 953 பேர், தனி­யார் தொண்டு நிறு­வ­னங்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்றார் அவர்.