தர்மபுரி: ஒட்டுமொத்த கிராம மக்களும் திருப்பதி கோவிலுக்குக் கிளம்பிச் சென்றதால் தர்மபுரி காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம், வசந்தபுரம் கிராம மக்கள்தான் இவ்வாறு திருப்பதி சென்றுள்ளனர்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறு திருப்பதிக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ள தாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
இக்கிராமத்தில் நானூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அக்குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்றாகக் கிளம்பிச் சென்றதால், மொத்த கிராமமே வெறிச்சோடிக் காணப்படுகிறது.
இதையடுத்து வசந்தபுரம் கிராமத்துக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும் கிராம மக்கள் ஊர் திரும்பும் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் நீடிக்கும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை 400 குடும்பங்களைச் சேர்ந்த, 900 பேர் மொத்தமாக 20 வாகனங்களில் திருப்பதிக்குச் சென்றுள்ளனர்.
அங்கு கோவிலில் காணிக்கை செலுத்திய பிறகு அவர்கள் ஊர் திரும்ப உள்ளனர்.

