புயல்: சென்னையில் ரூ.700 கோடி சேதம்

புயல்: சென்னையில் ரூ.700 கோடி சேதம்

2 mins read
4d8178c2-981f-4942-a0ad-39f4af4cee53
-

நிவாரண முகாம்களில் 9,000 பேர்; சீரமைப்புப் பணியில் 50,000 பேர்

சென்னை: மாண்­டஸ் புய­லின் சீற்­றத்­தால் சென்னை மாந­க­ரில் சுமார் 700 கோடி ரூபாய் அள­வுக்குச் சேதம் ஏற்­பட்­டுள்­ள­தாக முதற்­கட்ட கணக்­கீட்­டில் தெரி­ய­வந்­துள்­ள­தாக அர­சுத் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் மழைக்கு ஆறு பேர் பலி­யா­கி­விட்­ட­தா­க­வும் சென்­னை­யில் மட்­டும் சுமார் ஒன்­ப­தா­யி­ரம் பேர் நிவா­ரண முகாம்­களில் தஞ்­சம் அடைந்­தி­ருப்­ப­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

தமி­ழ­கம் முழு­வ­தும் ஏற்­பட்­டுள்ள சேதங்­கள் குறித்து இரண்­டொரு நாள்களில் முழு அறிக்கை வெளி­யிடப்­படும் என்று அரசு தெரி­வித்­துள்ள நிலை­யில், சென்னை மெட்ரோ ரயில் நிலை­யங்­களில் 3.45 கோடி ரூபாய் மதிப்­பி­லான பொருள்­கள் சேத­ம­டைந்­துள்­ள­தாக அதன் நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

சென்­னை­யில் மட்­டும் 400 மரங்­களும் 150க்கும் மேற்­பட்ட மின் கம்­பங்­களும் சாய்ந்­துள்­ளன. சென்னை மாந­க­ராட்சி, காவல்­து­றை­யைச் சார்ந்த 50,000 பேர் சீர­மைப்­புப் பணி­களில் ஈடு­ப­ட்டனர்.

"மெட்ரோ ரயில் நிலை­யங்­க­ளின் மேற்­கூ­ரை­கள் சேத­ம­டைந்­துள்­ளன. மூன்று மெட்ரோ ரயில் நிலை­யங்­களில் உள்ள வழி­காட்டி பல­கை­கள், இதர பொருள்­களும் சேத­ம­டைந்த நிலை­யில், சீர­மைப்­புப் பணி­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன," என்று அதி­கா­ரி­கள் கூறி­னர்.

மாண்­டஸ் புயல் கரை­யைக் கடந்­து­விட்டபோதி­லும் சென்னை, செங்­கல்­பட்டு, காஞ்­சி­பு­ரம் உள்ளிட்ட சில மாவட்­டங்­களில் சாரல் மழை நீடித்து வரு­கிறது. பனிக்­காற்று வீசுவதால் குளிர் தாங்க முடி­யா­மல் பலர் வீட்­டி­லேயே முடங்கியுள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

சென்­னை­யில் புய­லால் பாதிக்கப்­பட்ட பகு­தி­களில் மு.க.ஸ்டா­லின் தொடர்ந்து ஆய்வு மேற்­கொண்டு வரு­கிறார். சென்னை­யில் 17 ஐஏ­எஸ் அதி­கா­ரி­கள் கண்­கா­ணிப்பு அலு­வ­லர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்டு சீர­மைப்பு பணி­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்ளன. சென்னை­யில் 22 சுரங்­கப் பாதை­களில் எங்­குமே தண்­ணீர் தேங்­க­வில்லை. அத­னால் போக்­கு­வ­ரத்­தில் எவ்­வி­தச் சிக்­க­லும் தடை­யும் ஏற்­ப­ட­வில்லை. எதிர்வரும் 13ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி உருவாகும் என்றும் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.