தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

15 வண்ணங்களில் தயாராகும் இலவச வேட்டி, சேலைகள்

1 mins read
874ab58d-af17-49cd-9fe8-d4e86db61a0f
-

சென்னை: பொங்­கல் பண்­டிக்­கை யின்­போது தமி­ழக அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலை­கள் இம்முறை பதி­னைந்து வெவ்வேறு வண்ணங்­களில் தயா­ராகி வருவதாக கைத்தறித்­துறை அமைச்­சர் காந்தி தெரி­வித்­துள்­ளார்.

இம்­முறை 1.70 கோடி வேட்­டி­களும் 1.77 கோடி சேலை­களும் வழங்­கப்­பட உள்­ள­தாக திருப்­பூ­ரில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

"இது­வரை 50 விழுக்­காடு வேட்டி, சேலை­கள் தயா­ரா­கி­விட்டன. ஜன­வரி 10ஆம் தேதிக்­குள் மொத்த உற்­பத்­தி­யும் முடிந்­து­வி­டும். போர்க்­கால அடிப்­ப­டை­யில் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

"இம்­முறை இல­வச வேட்டி, சேலை­களில் மாறு­தல் செய்­யப்­பட்டு 15 புதிய வண்­ணங்­களில் சேலை­கள் விநி­யோ­கிக்­கப்­படும். அதே­போல் வேட்டி கரை ஓர் அங்குலம் அள­வுக்கு இருக்­கும்," என்­றார் அமைச்­சர் காந்தி.

இல­வச வேட்டி, சேலை வழங்கும் திட்­டத்­தின் மூலம் நூறா­யி­ரம் கைத்­தறி, விசைத்­தறி நெச­வா­ளர்­கள் பய­ன­டைந்­துள்­ள­னர் என்­றும் அவர்­க­ளுக்கு தொடர்ந்து ஆறு மாத வேலை வாய்ப்பு கிடைக்­கிறது என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

மேலும் இத்­திட்­டத்­து­டன் தொடர்­புள்ள மற்ற தொழில் வாய்ப்­பு­கள் மூலம் ஐம்­ப­தா­யி­ரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்­ப­தா­க­வும் செய்தியாளர்களிடம் பேசும்போது அமைச்சர் காந்தி குறிப்பிட்டார்.