இலங்கைக்கு கஞ்சா கடத்தல் என சந்தேகம்: கோடியக்கரையில் காவல்துறை சோதனை

இலங்கைக்கு கஞ்சா கடத்தல் என சந்தேகம்: கோடியக்கரையில் காவல்துறை சோதனை

1 mins read

ராமே­சு­வ­ரம்: கோடி­யக்­க­ரை­யில் இருந்து இலங்­கைக்கு கஞ்சா கடத்­தப்­ப­டு­வ­தாக தொடர் புகார்­கள் எழுந்­துள்ள நிலை­யில், காவல்­து­றை­யி­னர் அங்கு அதி­ரடி சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

அங்கு சந்­தே­கத்­துக்­கு­ரிய வகையில் செயல்­ப­டு­ப­வர்­க­ளி­டம் அதி­கா­ரி­கள் தீவிர விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

கோடி­யக்­கரை உள்­ளிட்ட தமிழகத்­தின் கரை­யோ­ரப் பகுதி­களில் இருந்து இலங்­கைக்கு கஞ்சா கடத்­தப்­ப­டு­வ­தா­க சமூக ஆர்­வ­லர்­கள் கூறி வரும் நிலை­யில், அப்­ப­குதி­களில் இருந்து கோடிக்­கணக்­கான ரூபாய் மதிப்­புள்ள கஞ்சா உள்­ளிட்ட போதைப்பொருள்­களைக் காவல்­துறை­யி­ன­ரும் கடலோ­ரக் காவல்­படை­யி­ன­ரும் பறி­மு­தல் செய்து வரு­கின்­ற­னர்.

இது தொடர்­பாக பலர் கைது செய்­யப்­பட்­டா­லும், கடத்­தல் சம்­பவங்­கள் குறைந்­த­பா­டில்லை.

மாண்­டஸ் புயல் சீற்­றத்­தால் கடந்த சில நாள்­க­ளாக தமி­ழக மீன­வர்­கள் கட­லுக்கு மீன்­பி­டிக்­கச் செல்­ல­வில்லை. இந்­நி­லை­யில் புயல் கரை­யைக் கடந்­து­விட்­ட­தால் மீண்டும் கட­லுக்­குச் செல்ல மீன­வர்­கள் தயா­ராகி வரும் நிலை­யில், கோடி­யக்­கரை உள்­ளிட்ட சில கட­லோ­ரப் பகு­தி­களில் காவல்­துறை­யினர் திடீர் சோதனை மேற்­கொண்­ட­தால் மீன­வக் கிரா­மங்­களில் பர­ப­ரப்பு நில­வு­கிறது.

எனினும் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையின்போது கஞ்சா உள்ளிட்ட எந்தப் போதைப் பொருளும் கைப்பற்றப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இப்பகுதிகளில் கண்காணிப்பு, சுற்றுக்காவல் பணி நீடிக்கும் எனத் தெரிகிறது.

அண்மையில் கூட ராமேசுவரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.360 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை காவல்துறையினர் கைப்பற்றினர்.

நடப்பாண்டில் பலமுறை கஞ்சா கடத்தல் முயற்சிகளைக் காவல்துறை முறியடித்துள்ளது.