புதிய புயல் சின்னம் 'மோகா' உருவாக வாய்ப்பு: பல்வேறு மாவட்டங்களில் நீடிக்கும் மழை

புதிய புயல் சின்னம் 'மோகா' உருவாக வாய்ப்பு: பல்வேறு மாவட்டங்களில் நீடிக்கும் மழை

2 mins read
40ee5920-4386-4f0c-a97d-c8ad590044ed
-

சென்னை: வங்­கக்­க­ட­லில் எதிர்­வரும் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்­ள­தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

இதை­ய­டுத்து புதிய புயல் உரு­வாக வாய்ப்­புள்­ள­தாக வானிலை நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, புதிய காற்றழுத்த தாழ்­வுப் பகுதி புயல் சின்­ன­மாக உரு­வெ­டுக்­கும் பட்­சத்­தில், அதற்கு 'மோகா' என்று பெயர் சூட்­டப்­படும் எனத் தெரி­ய­வந்­துள்­ளது. இந்­தப் பெயரை ஏமன் நாடு பரிந்­து­ரைத்துள்­ளது.

மாண்­டஸ் புயல் ஏற்­ப­டுத்­திய பாதிப்­பு­களில் இருந்து தமி­ழ­கம் மீள சில தினங்­கள் ஆகும் என்று கூறப்­படும் நிலை­யில், தமி­ழ­கம் மேலும் ஒரு புயலை எதிர்­கொள்­வதற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் அதி­க­ரித்­துள்­ளன.

மாண்­டஸ் புய­லால் சென்னையில் மட்­டும் சுமார் 700 கோடி ரூபாய் அள­வுக்கு சேதங்­கள் ஏற்­பட்­டுள்­ள­தாக முதற்­கட்ட கணக்­கீ­டு­கள் தெரி­விக்­கின்­றன. புய­லால் சாய்ந்து­விட்ட மரங்­களை அப்­பு­றப்­படுத்துவது, மின் கம்­பங்­களை மீண்­டும் நிலை­நி­றுத்­து­வது உள்ளிட்ட பணி­கள் புயல் வேகத்தில் நடை­பெற்று வரு­கின்­றன.

புயல் கரை­யைக் கடந்த பிற­கும் தமி­ழ­கத்­தின் பல்­வேறு மாவட்­டங்­களில் தொடர்ந்து மழை பெய்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், வங்­கக்­க­ட­லில் வரும் 16ஆம் தேதி புதிய காற்­றழுத்த தாழ்வு மண்­ட­லம் உரு­வாக வாய்ப்­புள்­ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­தது.

இது புய­லாக மாறி, இலங்கை, அத­னை­யொட்­டிய தமி­ழக பகு­தி­களில் கரை­யைக் கடக்க வாய்ப்பு இருப்­ப­தா­க­வும் அந்த நேரத்­தில் தமி­ழ­கத்­தில் மீண்­டும் கன­மழை பெய்­யக்­கூ­டும் என்­றும் கணிக்­கப்­பட்­டுள்­ளது.

'மோகா' புயல் தமி­ழ­கத்­தை தாக்குமா என்­பது ஓரிரு தினங்­களில் உறு­தி­யா­கும்.

இதற்­கி­டையே, சென்­னை­யில் நேற்று அதி­காலை முதல் இரவு வரை தொடர் மழை பெய்தது. மேலும் பலத்த குளிர் காற்­றும் வீசி­ய­தால் பொது­மக்­கள் வீடு­களுக்­குள் முடங்­கிக் கிடந்­த­னர்.

இதற்­கி­டையே முன்­னெச்­சரிக்கை நட­வ­டிக்­கையாக சென்னை அருகே உள்ள செம்­ப­ரம்­பாக்­கம் ஏரி­யில் இருந்து மூவாயி­ரம் கன­அடி தண்­ணீர் திறந்­து­வி­டப்­பட்­ட­தாக பொதுப்பணித்துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.