300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள் மீட்பு

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள் மீட்பு

1 mins read

சென்னை: வீடு ஒன்­றில் பதுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த 300 ஆண்­டு­கள் பழமை வாய்ந்த பல­கோடி ரூபாய் மதிப்­புள்ள ஏழு பழங்­கா­லச் சிலை­களை சென்­னை­யில் காவல்­து­றை­யி­னர் மீட்­ட­னர்.

சென்னை ஆர்ஏ புரத்­தில் உள்ள வீட்­டில் பழமை வாய்ந்த சிலை­கள் பதுக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக சிலை கடத்­தல் தடுப்­புப்­பி­ரி­வுக்கு ரக­சி­யத் தக­வல் கிடைத்­தது. அதன் பேரில் உடனடியாக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

இச்­சி­லை­கள் பல­கோடி ரூபாய் மதிப்­புள்­ளவை என்­றும் இது தொடர்­பாக இரு­வ­ரி­டம் விசா­ரணை நடை­பெற்று வரு­வ­தா­க­வும் காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.