சென்னை: இலங்கையின் யாழ்ப்பாணம், சென்னை நகரங்களுக்கு இடையேயான விமானச் சேவை மீண்டும் தொடங்கி உள்ளது.
கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த விமானச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த விமானச் சேவை தொடங்கியது.
டிசம்பர் 12ஆம் தேதி முதல் இந்தச் சேவை மீண்டும் தொடங்கும் என்றும் வாரந்தோறும் நான்கு விமானங்கள் இயக்கப்படும் என்றும் இலங்கை நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிமல சிறிபால டி சில்வா கூறியிருந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சென்ற விமானத்துக்கு பலாலி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

