11ஆம் நூற்றாண்டுக் கால கல்வெட்டு கண்டெடுப்பு

11ஆம் நூற்றாண்டுக் கால கல்வெட்டு கண்டெடுப்பு

1 mins read

தி.மலை: திரு­வண்­ணா­மலை மாவட்டம், செங்­கம் பகு­தி­யில் 11ஆம் நூற்­றாண்­டைச் சேர்ந்த கல்­வெட்டு ஒன்று கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

இது வீர ராஜேந்­திர சோழர் கால கல்­வெட்டு என்­றும் கோவி­லுக்குத் தான­மாக நிலம் வழங்­கப்­பட்­டது குறித்த தக­வல்­கள் அக்­கல்­வெட்­டில் இடம்­பெற்­றுள்­ள­தா­க­வும் அங்­குள்ள பாய்ச்­சல் கிரா­மத்­தில் ஆய்வு மேற்­கொண்­டுள்ள குழு­வின் தலை­வர் பிரேம் ஆனந்த் தெரி­வித்­துள்­ளார்.

"பாய்ச்­சல் கிரா­மத்­தில் உள்ள வேப்ப மரத்­த­டி­யில் இந்­தக் கல்வெட்டு இருந்­தது. இதை ஆய்வுக்கு உட்­ப­டுத்­தி­ய­போது, எவ்­வ­ளவு பழமை வாய்ந்­தது எனத் தெரி­ய­வந்­தது.

"11ஆம் நூற்­றாண்­டில் வீர ராஜேந்­திர சோழர் காலத்­தில் வாலீஸ்­வர முடை­யார் என்ற கோவி­லுக்கு தான­மாக நிலம் வழங்கி உள்­ள­தாக கல்­வெட்­டில் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

"அதன் மேற்­ப­ரப்­பில் சூலம் செதுக்­கப்­பட்­டுள்­ளது. கல்­வெட்­டில் உள்ள எழுத்­து­களில் பெண்ணை வட­கரை என்­பது தென்­பெண்ணை ஆற்­றின் வட­க­ரைப் பகு­தி­யா­கும்.

"ஆடை­நாடு என்­பது ஆடையூர் நாடா­கும். திரு­வண்­ணா­மலை, செங்கம் பகு­தியை உள்­ள­டக்­கி­ய­தா­கும். வாண­க­பாடி என்­பது திருக்­கோ­வி­லூரைக் குறிப்­ப­தா­கும்," என்றார் பிரேம் ஆனந்த்.