இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.160 கோடி போதைப்பொருள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ.160 கோடி போதைப்பொருள் பறிமுதல்

2 mins read

ராம­நா­த­பு­ரம்: இலங்­கைக்கு கடத்­திச்செல்­வ­தற்­கா­கக் காரில் கொண்டு வரப்­பட்ட கஞ்சா எண்­ணெய், கிறிஸ்­டல் மெத்­தபெட்­ட­மின் ஆகிய ரூ.160 கோடி மதிப்­புள்ள போதைப்பொருள்­களை மத்­திய வரு­வாய் புல­னாய்­வுத் துறை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர்.

இவற்றை ஒரு பெட்­டி­யில் அடைத்து, முத்திரை வைத்து நீதி­மன்­றத்­துக்கு அதி­கா­ரி­கள் எடுத்­துச் சென்­ற­னர்.

அத்­து­டன், இந்­தக் கடத்­த­ல் சம்பவத்தில் தொடர்புடைய சென்னை கொடுங்­கை­யூர் பாக்­ய­ராஜ், 39, தன­சே­கர், 32, ஆகிய இரு­வ­ரை­யும் கைது செய்து, ராம­நா­த­பு­ரம் நீதி­மன்­றத்­தில் முன்னிலைப் படுத்தினர்.

போதைப்­பொ­ருள்களை தாங்கள் சென்­னை­யி­ல் இ­ருந்து கடத்தி வந்ததாகவும் மண்­ட­பம் அருகே உள்ள மரைக்­கா­யர்பட்­டி­னத்­தைச் சேர்ந்த ஒரு­வ­ரி­டம் ஒப்­ப­டைக்க இருந்­த­தாகவும் அவற்றை பின்னர் மண்­ட­பம் அருகே உள்ள வேதாளை கடல் வழி­யாக இலங்­கைக்கு கடத்­த­இருந்­த­தா­க­வும் அதி­காரி­க­ளி­டம் இரு­வ­ரும் கூறினர்.

சென்­னை­யில் இருந்து ராம நாத­பு­ரம் மாவட்­டம், மண்­ட­பம் கடல்­ப­குதி வழி­யாக இலங்­கைக்கு பல கோடி ரூபாய் மதிப்­பி­லான போதைப்­பொ­ருள் கடத்­தப்­பட உள்­ள­தாக மத்­திய புல­னாய்­வுத் துறை­யி­ன­ருக்குத் தக­வல் கிடைத்­தது.

இதை­ய­டுத்து, மதுரை, திருச்சி, தூத்­துக்­கு­டி­யைச் சேர்ந்த வரு­வாய்ப் புல­னாய்­வுத் துறை­யி­னர் கட­லோர மாவட்­டங்­களில் தீவிர சோதனையில் ஈடு­பட்­ட­னர். அப்போது, ராம­நா­த­பு­ரம் மாவட்­டம், சத்­தி­ரக்­குடி சுங்­கச் சாவடி அருகே சென்ற காரை மடக்கி, அதி­லி­ருந்த இரு­வரிடம் விசாரித்தபோது அவர்கள் முன்­னுக்­குப் பின் முர­ணாக பேசி­னர்.

அவர்களது காரில் நடத்திய சோத­னையில் 38 கிலோ கிறிஸ்­டல் மெத்­தபெட்­ட­மின், 50 கிலோ கஞ்சா எண்ணெய் இருந்­தன.

இரு­வ­ரை­யும் கைது செய்து காரு­டன் ராம­நா­த­பு­ரம் சுங்­கத்­துறை அலு­வ­ல­கத்­திற்கு அழைத்­துச்­சென்று விசா­ரணை செய்­த­னர்.

விசா­ர­ணை­யில் அவர்­கள் காரில் கடத்தி வந்­தது அனைத்­து­லக அள­வில் பயன்­ப­டுத்­தப்­படும் போதைப்­பொ­ருள்­க­ளான கஞ்சா எண்ணெய், மெத்­தபெட்­ட­மின் எனத் தெரிய வந்­தது. இதன் அனைத்துலக மதிப்பு ரூ.160 கோடி இருக்­கும் என சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்துள்ளனர்.