தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

201 ஏரிகள் நிரம்பின; 60 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வெள்ளத்தில் காணாமல் போன நான்கு பெண்களில் மூவர் பலி

2 mins read
433d3a88-17a6-4626-a2ed-3a7dae72bfdc
-

கூட­லூர்: நீர்­நி­லை­களில் ஏற்­பட்ட வெள்­ளப் பெருக்­கால் பல இடங்­களில் தரைப்­பா­லங்­கள் நீரில் மூழ்­கிய நிலை­யில், உதகை அருகே காட்­டாற்று வெள்­ளத்­தில் சிக்­கிய நான்கு பெண்­களில் மூவரை தீய­ணைப்­புத்­து­றை­யி­னர் சட­ல­மாக மீட்­ட­னர்.

காணா­மல்­போன மற்ற ஒரு வரையும் தேடும் பணி தீவி­ர­மாக நடந்­து­வ­ரு­கிறது.

நீல­கிரி மாவட்­டம், உதகை சீகுர் வனப்­ப­கு­தி­யில் புகழ்பெற்ற ஆணிக்­கல் மாரி­யம்­மன் கோவில் உள்­ளது. இங்கு வந்து வழிபட்ட ஆயி­ரக் கணக்­கான பக்­தர்­களில் சிலர் வழிபாடு முடிந்து கோயில் அருகே உள்ள தரைப்­பா­லத்­தைக் கடந்து கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது திடீ­ரென்று ஏற்­பட்ட வெள்­ளத்­தில் ஜக்­க­லூ­ரைச் சேர்ந்த சரோஜா, 65, வாசுகி, 45, விமலா, 35, சுசீலா 56, ஆகி­யோர் ஆற்­றில் அடித்­துச் செல்­லப்­பட்­ட­னர்.

காவ­லர்­கள், வனத்­து­றை­யி­னர், தீய­ணைப்­புத் துறை­யி­னர் கிராம மக்­கள் உத­வி­யு­டன் தேடும் பணி­யில் ஈடு­பட்­ட­னர். திங்களன்று நள்ளிரவு வரை யாரும் மீட்கப்பட­வில்லை.

நேற்று அதி­காலை 4 மணிக்கு மீண்டும் தேடத் துவங்­கியபோது, மூவ­ரின் உடல் மீட்­கப்­பட்­டது.

இத­னி­டையே, மாண்­டஸ் புய­லைத் தொடர்ந்து சென்­னை­யி­லும் அதன் புற­ந­கர்ப் பகு­தி­க­ளி­லும் கன­ மழை கொட்டி வரு­வ­தால், செம் பரம்­பாக்­கம், புழல், பூண்டி, சோழ வரம் உள்­ளிட்ட ஏரி­கள் வேக­மாக நிரம்பி வரு­கின்­றன.

பூவி­ருந்­த­வல்­லி­யி­லும் அதன் சுற்­றுப்­ப­கு­தி­க­ளி­லும் பெய்த கன­மழை­யால் செம்­ப­ரம்­பாக்­கம் பகுதி வெள்­ளக்­கா­டாக மாறியது.

வீடு­க­ளுக்­குள் மழை­நீர் புகுந்­த­தால் மக்­கள் பெரும் சிர­மத்­துக்கு ஆளா­கி­னர். கூவம் ஆற்­றில் ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்­கால் மதுர வாயல், திருவேற்காடு பகுதியில் நான்கு தரைப்பாலங்கள் மூழ்கின.

செம்­ப­ரம்­பாக்­கம் ஏரிக்கு நீர் வரத்து அதி­க­ரித்­துள்­ள­தால் குன்­றத்­தூர், காவ­லூர், திரு­மு­டி­வாக்­கம், திரு­நீர்­மலை உள்­ளிட்ட கரை­யோர மக்­க­ளுக்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

பொன்­னேரி அருகே உள்ள கொசஸ்தலை ஆற்­றி­லும் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது.

இதன் கார­ண­மாக வன்­னிப்­பக்­கம், நம்­பாக்­கம், கிருஷ்­ணா­பு­ரம், மீஞ்­சூர் உள்­ளிட்ட 60 கிரா­மங்­களுக்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு மாவட்­டங்­களில் பொதுப்­ப­ணித்­து­றை­யின் கட்­டுப்­பாட்­டில் 909 ஏரி­கள் உள்­ள நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை கார­ண­மாக 201 ஏரி­கள் முழு கொள்­ள­ளவை எட்டியுள்­ளன. தற்­போ­தைய நில­வ­ரப்­படி 631 ஏரி­கள் நிரம்பி வருவதாகவும் கூறப்படுகிறது.