எட்டுக் காளைகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தயாராகி வரும் திருநங்கை கீர்த்தனா

எட்டுக் காளைகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தயாராகி வரும் திருநங்கை கீர்த்தனா

2 mins read
d48ff1e3-6ff8-44c1-8ead-05e7d06527e5
-

மதுரை: வரும் பொங்­கல் திரு­நாளை ஒட்டி நடை­பெற உள்ள ஜல்­லிக்­கட்­டுப் போட்­டி­யில் கள­மி­றக்க எட்டு காளை­க­ளுக்­குப் பயிற்­சி­ய­ளித்து வரு­கி­றார் கீர்த்­தனா என்ற திரு­நங்கை.

பல்­வேறு துறை­க­ளி­லும் கால் பதித்து வரும் மூன்­றாம் பாலி­னத்­தைச் சேர்ந்த இவர்­கள், வலிமை, வீரத்­தைப் பறை­சாற்­று­வ­தற்கு பாலி­னம் ஒரு தடை­யல்ல என்­பதை நிரூ­பிக்­கும் வகை­யில் இந்த வீர விளை­யாட்­டில் களம் காணத் தயா­ராகி வரு­கின்­ற­னர்.

பொங்­கல் சம­யத்­தில் அலங்­கா­நல்­லூர், அவ­னி­யா­பு­ரம், பால­மேடு ஆகிய இடங்­களில் நடை­பெ­றும் ஜல்­லிக்­கட்­டுப் போட்­டி­கள் உல­கப் புகழ்­பெற்­றவை.

இப்­போட்­டி­யில் பங்­கேற்­ப­தற்­காக காளை­களை வளர்ப்­ப­வர்­கள் அவற்­றைத் தயார்ப்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

மதுரை மாவட்­டம், பொட்­டப்­ப­னை­யூர் பகு­தி­யைச் சேர்ந்த கீர்த்­த­னா­வும் தன் எட்டு காளை­க­ளுக்­குத் தீவிரப் பயிற்சி அளித்து வரு­கி­றார். காளை­க­ளைப் பரா­ம­ரிப்­ப­தற்கு இதர திரு­நங்கை தோழி­களும் அவ­ருக்கு உதவி வரு­கின்­ற­னர்.

"பல­ரும் அவ­ர­வர்­க­ளுக்­கும் பிடித்த, படித்த துறை­களில் சாதித்து வரு­கி­றார்­கள். எனக்கு இந்­தப் பாரம்­ப­ரி­ய­மான ஜல்­லிக்­கட்டுப் போட்­டி­யில் சாதிக்க ஆசை உள்­ளது. அதற்­காக பல ஆண்­டு­க­ளாக உழைத்து வரு­கி­றேன்," என்று சொல்­கி­றார் கீர்த்­தனா.

"2023 தைப்­பொங்­கல் சம­யத்­தில் எனது காளை­க­ளைப் போட்­டி­யில் கள­மி­றக்­கத் தயா­ராகி வரு­கி­றேன். இக்­கா­ளை­க­ளையே நாங் கள் எங்­கள் குழந்­தை­க­ளாக நினைத்து வளர்த்து வரு­கி­றோம்," என்று அவர் மேலும் கூறி­னார்.

"போட்டி நடை­பெ­றும் வாடிக்­குள் போய்­விட்டு எங்­கள் காளை­கள் திரும்­பி­வ­ரும் வரை எங்­கள் உயிர் எங்­க­ளி­டம் இருக்­காது, அப் படி ஒரு பந்­தம் உள்­ளது," என்­கி­றார் திரு­நங்கை அக்­‌ஷயா.

எனக்குக் குழந்தைகள் இல்லை. இந்தக் காளைகளைத்தான் நாங்கள் குழந்தைகளாக நினைக்கிறோம். இந்தக் காளைகள் வெற்றிபெறும்போது, என் பிள்ளைகள் ஒரு போட்டியில் வென்றால் எந்தளவுக்கு மகிழ்ச்சி அடைவேனோ, அதே அளவு மகிழ்ச்சி அடைவேன்.

திரு­நங்கை கீர்த்தனா.