கோயம்புத்தூர்: பசு மாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோயம்புத்தூரில் சினைப் பசு ஒன்றுக்கு சிவனடியார்கள் வளைகாப்பு நடத்தினர்.
பசுவின் சிறப்புக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் கோவை இருகூர் வெள்ளேரி அங்காளம்மன் கோயிலில் பசுவுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.
சிவனடியார் இருகூர் நாகராஜனின் 3 வயதுடைய காரிப்பசு, முதல் முறையாக சினையுற்றதைத் தொடர்ந்து, அப்பசுவுக்கு பட்டாடை அணிவித்து, கழுத்து, கொம்புகளில் மலர் மாலை, வளையல் அணிவித்து வழிபாடு செய்யப்பட்டது.
பின்னர், பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர் உள்ளிட்ட ஒன்பது வகை உணவுகள் பசு மாட்டுக்கு ஊட்டப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு பிரசாதத்துடன் வளையல், உடை, தாலிச்சரடு உள்ளிட்டவை கொடுக்கப்பட்டன.

